ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், அரிசி மாவு, வெள்ளை ரவை - தலா கால் கப், தயிர் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு இன்ச், பச்சைமிளகாய் - ஒன்று, உப்பு - தேவைக்கு. செய்முறை: ஓட்ஸை வெறும் வாணலியில் போட்டு வரும் வரை நன்றாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து மாவாக்கவும். அகலமான பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், அரிசி மாவு, வெள்ளை ரவை, சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்துமல்லித்தழை, உப்பு, தயிர் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர்விட்டு 'ரவா தோசை பதத்திற்கு கரைக்கவும். இந்த மாவை சூடான தோசைக்கல்லில் ரவா தோசையைப் போல ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, தோசைக்கல்லை மூடி வேகவிடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக வெந்ததும் எடுக்கவும்.