பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், அரிசி மாவு, வெள்ளை ரவை - தலா கால் கப், தயிர் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு இன்ச், பச்சைமிளகாய் - ஒன்று, உப்பு - தேவைக்கு. செய்முறை: ஓட்ஸை வெறும் வாணலியில் போட்டு வரும் வரை நன்றாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து மாவாக்கவும். அகலமான பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், அரிசி மாவு, வெள்ளை ரவை, சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்துமல்லித்தழை, உப்பு, தயிர் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர்விட்டு 'ரவா தோசை பதத்திற்கு கரைக்கவும். இந்த மாவை சூடான தோசைக்கல்லில் ரவா தோசையைப் போல ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, தோசைக்கல்லை மூடி வேகவிடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக வெந்ததும் எடுக்கவும்.