பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
புழுங்கல் அரிசி2கப்.பச்சரிசி1கப். இரண்டையும் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் .அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அடை போல கனமாக தோசைகளாக வார்க்கவும் .சிவக்க விடாமல் வெண்மையாக சிம்மில் வைத்து ஊத்த வேண்டும். ஆறியவடன் அந்த தோசையை சின்ன சின்னதாக கில்லி ஒரு டப்பாவில் வைக்கவும். பிறகு 2 கப் துவரம்பருப்பு குக்கரில் அரை பதத்திற்கு வேக வைக்கவும். ஒரு வாணலியில் சீரகம் 2 ஸ்பூன் எண்ணெய் விடாமல் வறுத்து. மிக்ஸியில் ஜாரில் ஒன்றிரண்டாக அரைக்கவும். 2 கப் தேங்காய் நைசாக துருவி எடுத்துக் கொள்ளவும். குக்கரில் நாம் வேக வைத்த துவரம்பருப்பை. ஜாரில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு. கடுகு .சீரகம் .காய்ந்த மிளகாய் 10.கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும் பின் கில்லி வைத்த அடைபை சேர்த்து நன்றாக கிளறவும். அதில் துவரம் பருப்பு. தேங்காய் துருவல். சீரகப்பொடி அதில் சேர்க்கவும். தேங்காய் எண்ணெய் தேவையான அளவு சேர்த்து .எல்லா புறமும் நன்றாக கிளறி விட்டு மிருதுவாக வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.க...