பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
கேசரி போளி 100 கிராம் ரவை சக்கரை-ஒன்றரை கப், - 130 மில்லி கோரிப்பவுடர் 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் மைதாமாவுடன் கோரிப்டவுடர், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ரவையை நெய்யில் வறுத்து, ஒரு பங்கு ரவைக்கு இருபங்கு அளவு தண்ணீரை வாணலியில் ஊற்றி, வறுத்த ரவையைத் தூவி கிளறவும். இதனுடன் கேசரிப்பவுடர், சர்க்கரை, நெய் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும், பிசைந்த மைதாமாவை சிறிய சைஸ் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். நெய் தடவிய வாழை இலையில் இந்த உருண்டையை வைத்து, வட்டமாகத் தட்டி, ரெடியாக வைத்துள்ள கேசரியை இதனுள் சிறிது வைத்து மூடி, மறுபடியும் வட்டமாகத் தட்டவும். இந்த போளிகளை நெய் தடவிய தவாவில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும் சர்க்கரைவள்ளி கிழங்கு சுகியன் தேவையானவை: மைதாமாவு - 100 கிராம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு 4. பொடித்த வெல்லம் 100 கிராம். எண்ணெய் - 250 மில்லி, ஏலக்காய்தூள் சிறிதளவு. செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். இதனுடன் ...