ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
          அரைத்து விட்ட சாம்பார் 
                                     & 
                   கொள்ளு மசியல்      
தேவையானவை: துவரம் பருப்பு, விருப்பமான காய்கறிக் கலவை (நறுக்கியது) - தலா ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சிறிதளவு, புளி - நெல்லிக்காயளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தனியா, கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன். (இவற்றை வெறும் வாணலியில் வறுத்து அரைக்கவும்).
  செய்முறை: புளியை ஊற விடவும். பருப்புடன் மதூள் சேர்த்து குழைய வேகவிடவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, காய்கறிகள், சாம்பார் பொடி, உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும், பின்னர் அரைத்த விழுது, பருப்புக் கலவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
                  கொள்ளு மசியல்
  தேவையானவை: கொள்ளு
  ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 4, பூண்டு - 5 பல், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. ஒரு சிட்டிகை,
  செய்முறை: கொள்ளுடன் கலந்திருக்கும் கற்களை
  நீக்கி, 10 நிமிடம் ஊறவிடவும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். கொள்ளு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டி பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக