பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
அரைத்து விட்ட சாம்பார்
&
கொள்ளு மசியல்
தேவையானவை: துவரம் பருப்பு, விருப்பமான காய்கறிக் கலவை (நறுக்கியது) - தலா ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சிறிதளவு, புளி - நெல்லிக்காயளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தனியா, கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன். (இவற்றை வெறும் வாணலியில் வறுத்து அரைக்கவும்).
செய்முறை: புளியை ஊற விடவும். பருப்புடன் மதூள் சேர்த்து குழைய வேகவிடவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, காய்கறிகள், சாம்பார் பொடி, உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும், பின்னர் அரைத்த விழுது, பருப்புக் கலவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
கொள்ளு மசியல்
தேவையானவை: கொள்ளு
ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 4, பூண்டு - 5 பல், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. ஒரு சிட்டிகை,
செய்முறை: கொள்ளுடன் கலந்திருக்கும் கற்களை
நீக்கி, 10 நிமிடம் ஊறவிடவும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். கொள்ளு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டி பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக