மலாய் கொஃப்தா மசாலா தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2, உருளைக்கிழங்கு - 2, கேரட் - 2, மஞ் தாள்-Vடீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், கரம்மசாலா - % டீஸ்பூன், எண்ணெய் - 150 மிலி, உப்பு - தேவையான அளவு, சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், பிரட்ஸ்லைஸ் - 4, லைம் ஜூஸ் ஒரு டீஸ்பூன். செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் சுத்தம் செய்து வேசு வைத்து தனித்தனியாக மசித்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி, பிரட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கலவையில் சேர்க்கவும். அடுப்பை அணைத்து லைம் ஜூஸ் கலந்து, சோளமாவுடன் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி. எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்- 3, தக்காளி - 2, மஞ்சள்தூள் டீஸ்பூன், மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன், பட்டை - 2, லவங்கம் - 2, உப்பு, கொத்துமல்லித்தழை - தேவையான அளவு. செய்முறை: பட்டை, லவங்கத்தை ...
அரைத்து விட்ட சாம்பார்
&
கொள்ளு மசியல்
தேவையானவை: துவரம் பருப்பு, விருப்பமான காய்கறிக் கலவை (நறுக்கியது) - தலா ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சிறிதளவு, புளி - நெல்லிக்காயளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தனியா, கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன். (இவற்றை வெறும் வாணலியில் வறுத்து அரைக்கவும்).
செய்முறை: புளியை ஊற விடவும். பருப்புடன் மதூள் சேர்த்து குழைய வேகவிடவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, காய்கறிகள், சாம்பார் பொடி, உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும், பின்னர் அரைத்த விழுது, பருப்புக் கலவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
கொள்ளு மசியல்
தேவையானவை: கொள்ளு
ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 4, பூண்டு - 5 பல், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. ஒரு சிட்டிகை,
செய்முறை: கொள்ளுடன் கலந்திருக்கும் கற்களை
நீக்கி, 10 நிமிடம் ஊறவிடவும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். கொள்ளு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டி பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக