குடைமிளகாய் ஃபிரை தேவையானவை: குடைமிளகாய், தக்காளி - தலா 1. வெங்காயம் - 2, மிளகு சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், சதுரமாக நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகு, சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். வாழைக்காய் ஃப்ரை தேவையானவை: வாழைக்காய் - 2, பிரெட் துண்டுகள் - 3, துருவிய காலிஃபிளவர் - அரை கப்,கரம்மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இட்லி மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், நெய் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு. வாழைக்காய் தோல் சீவி வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து, நீரை பிழிந்து, அதை வாழைக்காயோடு சேர்க்கவும். பின்னர் நெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து, பிசைந்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகற்காய் ஃபிரிட்டர்ஸ் தேவையானவை: பெரிய சைஸ் பாகற்காய் - 2, சோள மாவு, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், இஞ...
அரைத்து விட்ட சாம்பார்
&
கொள்ளு மசியல்
தேவையானவை: துவரம் பருப்பு, விருப்பமான காய்கறிக் கலவை (நறுக்கியது) - தலா ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சிறிதளவு, புளி - நெல்லிக்காயளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தனியா, கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன். (இவற்றை வெறும் வாணலியில் வறுத்து அரைக்கவும்).
செய்முறை: புளியை ஊற விடவும். பருப்புடன் மதூள் சேர்த்து குழைய வேகவிடவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, காய்கறிகள், சாம்பார் பொடி, உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும், பின்னர் அரைத்த விழுது, பருப்புக் கலவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
கொள்ளு மசியல்
தேவையானவை: கொள்ளு
ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 4, பூண்டு - 5 பல், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. ஒரு சிட்டிகை,
செய்முறை: கொள்ளுடன் கலந்திருக்கும் கற்களை
நீக்கி, 10 நிமிடம் ஊறவிடவும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். கொள்ளு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டி பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக