பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
ஈரல்-மிளகு வறுவல் தேவையானவை ஆட்டு ஈரல் கால் கிலோ, மஞ் சள்தாள், சீரகம் - தலா அரை டீஸ்பூன், தனியாத்தாள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன். இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 7 பல். கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: ஈரலுடன் தனியாத்தூள், சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டுடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு, சீரக விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் ஊற வைத்த ஈரலை சேர்த்து, அதனுடன் மீதமுள்ள மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். ஈரல் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து வரும்போது, கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். கடாய் சிக்கன் தேவையானவை: சிக்கன் - அரை கிலோ, வெங்காயம், தக்காளி - தலா 2. இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி, நெய் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவ...