பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
பனீர் கசடிலா தேவையானவை: பரோட்டா 4. பனீர் துருவல் - ஒரு கப், பெரிய வெங்காயம், சின்ன சைஸ் தக்காளி - தலா ஒன்று, குடைமிளகாய் பாதியளவு, பூண்டு - 2, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலா - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 டீஸ்பூன், சீஸ் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: எண்ணெய் சேர்க்காமல் பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு, முக்கால் பதத்திற்கு சுட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, உரித்த பூண்டைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சற்றே பொன்னிறமானதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் பனீர் துருவலைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும். கசடிலா செய்முறை: தோசைக்கல்லில் பரோட்டாவை போட்டு, அதன் மீது பனீர் கலவையை வைத்து, 2 டீஸ்பூன் சீஸை தூவவும். பின்னர் அதை மற்றொரு பரோட்டாவால் மூடி, சுற்றிலும் எண்ணெய் விட்ட...