முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

Engineering & CAD Design Services in Chennai | The CAD Company

https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...

பனீர் கசடிலா &பனீர் குருமா&பனீர் இடியப்பம் 

 பனீர் கசடிலா 

 தேவையானவை: பரோட்டா 4. பனீர் துருவல் - ஒரு கப், பெரிய வெங்காயம், சின்ன சைஸ் தக்காளி - தலா ஒன்று, குடைமிளகாய் பாதியளவு, பூண்டு - 2, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலா - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 டீஸ்பூன், சீஸ் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை: எண்ணெய் சேர்க்காமல் பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு, முக்கால் பதத்திற்கு சுட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, உரித்த பூண்டைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய


வெங்காயம் சேர்த்து சற்றே பொன்னிறமானதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் பனீர் துருவலைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும்.


கசடிலா செய்முறை: தோசைக்கல்லில் பரோட்டாவை போட்டு, அதன் மீது பனீர் கலவையை வைத்து, 2 டீஸ்பூன் சீஸை தூவவும். பின்னர் அதை மற்றொரு பரோட்டாவால் மூடி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் மொறுமொறுப்பாகவும் பொன்னிறமாகவும் மாறியதும் எடுக்கவும். பின்னர் பீட்ஸாவை போல துண்டுகளாக்கிப் பரிமாறவும்


பனீர் குருமா

 அரைக்க: தேங்காய் - கால் கப், முந்திரி - 10, சோம்பு, கரம் மசாலா தலா அரை டீஸ்பூன், இஞ்சி - அரை இன்ச், பூண்டு 3 பல், சின்ன சைஸ் தக்காளி ஒன்று, தனியாத்தூள், மிளகாய்த்தூள் தலா ஒரு டீஸ்பூன் தேவையானவை: பனீர் - 200 கிராம், பெரிய வெங்காயம் ஒன்று, சோம்பு அரை டீஸ்பூன், கீறிய பச்சைமிளகாய் ஒன்று, கொத்துமல்லித்தழை - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும். பனீரை துண்டுகளாக்கி, வெந்நீரில் போட்டு மிருதுவாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சோம்பு, பச்சைமிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் பனீர் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.


குறிப்பு: தோசைக்கு ஏற்ற குருமா இது!


                பனீர் இடியப்பம் 

தேவையானவை: பனீர் துருவல் 100 கிராம், இடியாப்பம் இரண்டரை கப், வெங்காயம், தக்காளி - தலா 2, தனியாத்தாள், மிளகாய்த்தூள் தலா ஒரு டீஸ்பூன், மஞ் சந்தாள் - கால் டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


தாளிக்க: கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து,


செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகை பொரிய விடவும். பின்னர் சீரகம், கீறிய பச்சைமிளகாய்,


கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பச்சைமிளகாய் சற்றே நிறம் மாறியதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பனீர் துருவலைச் சேர்க்கவும். பின்னர் இடியாப்பத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கி, கொத்துமல்லித்தழைத் தூவி, சூடாக பரிமாறவும்.


குறிப்பு: வேக வைத்த பட்டாணியையே கார்னையோ ஒரு கைப்பிடியளவு சேர்க்கலாம்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...