பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
பூதரெகுலு தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - 100 கிராம், அரிசி தாள்கள் -15 (இவை தனியாக கடைகளில் கிடைக்கும்), பாதாம் பருப்பு- 5, முந்திரிப் பருப்பு - 5, எண்ணெய் - 100 மில்லி, நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் -3 செய்முறை: வாணலியில் நெய்யை ஊற்றி உருக்கி, ஆறவைக்கவும். அரிசி தாள்களை ஒவ்வொரு லேயராக அடுக்கவும். முதலில் ஒரு அரிசி தாளை விரித்து அதில் பாரிஸின் தூள் வெல்லத்தை ஒரு டேபிள் ஸ்பூன் போடவும். மேலே ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும்: நறுக்கிய பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதன்மீது அடுத்த அடுக்காக மற்றொரு அரிசி தாளை வைத்து, அதன்மீதும் பாரிஸின் தூள் வெல்லத்தைப் பரப்பி, எல்லா இடத்திலு நெய் ஊற்றி, பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதே போல 4 அரிசி தாள்களை செய்து, அதனை 'ரோல்' செய்யவும். இது ஒரு 'பூதரெகுலு' ஆகும். இதே போல் ஒவ்வொ ரோல்களாக செய்தால், சுவையான 'பூதரெகுலு' ஸ்வீட் தயார்! ஆந்திராவின் அத்ரேயபுரம் கிராமத்தின் அன்புப் பரிசான 'பூதரெகுலு' வேற லெவல் இனிப்பு உணவாகும்! பேப்பர் போன்ற மெல்லிய மேற்புறத்துடன் மணமணக்கும் நெய்யுடன் கலந்து செய்யப்படும் இந்த டிஷ், உங்களுக்...