முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

www.kalaireal360.xyz

Engineering & CAD Design Services in Chennai | The CAD Company

https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...

பூதரெகுலு&மைசூர் பாகு&சந்திரகலா

பூதரெகுலு தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - 100 கிராம், அரிசி தாள்கள் -15 (இவை தனியாக கடைகளில் கிடைக்கும்), பாதாம் பருப்பு- 5, முந்திரிப் பருப்பு - 5, எண்ணெய் - 100 மில்லி, நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் -3 செய்முறை:  வாணலியில் நெய்யை ஊற்றி உருக்கி, ஆறவைக்கவும். அரிசி தாள்களை ஒவ்வொரு லேயராக அடுக்கவும். முதலில் ஒரு அரிசி தாளை விரித்து அதில் பாரிஸின் தூள் வெல்லத்தை ஒரு டேபிள் ஸ்பூன் போடவும். மேலே ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும்: நறுக்கிய பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதன்மீது அடுத்த அடுக்காக மற்றொரு அரிசி தாளை வைத்து, அதன்மீதும் பாரிஸின் தூள் வெல்லத்தைப் பரப்பி, எல்லா இடத்திலு நெய் ஊற்றி, பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதே போல 4 அரிசி தாள்களை செய்து, அதனை 'ரோல்' செய்யவும். இது ஒரு 'பூதரெகுலு' ஆகும். இதே போல் ஒவ்வொ ரோல்களாக செய்தால், சுவையான 'பூதரெகுலு' ஸ்வீட் தயார்! ஆந்திராவின் அத்ரேயபுரம்  கிராமத்தின் அன்புப் பரிசான 'பூதரெகுலு' வேற லெவல் இனிப்பு உணவாகும்! பேப்பர் போன்ற மெல்லிய மேற்புறத்துடன் மணமணக்கும் நெய்யுடன் கலந்து செய்யப்படும் இந்த டிஷ், உங்களுக்...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...

சுந்தா &ஆம் கா பப்பட் & லௌக்கி டேப்லா

 சுந்தா தேவையானவை: புளிப்பான மாங்காய்கள் - 4, சர்க்கரை 1 கப், சோம்பு, வெந்தயம், கடுகு - தலா 2 ஸ்பூன், கரகரப்பாக அரைத்த மிளகாய்த்தூள் - 1 கப், உப்பு - தேவைக்கு. செய்முறை: மாங்காயின் தோலை நீக்கி, துருவவும். வெறும் கடாயில் வெந்தயம், கடுகு, சோம்பை வறுத்து, கரகரப்பாகப் பொடிக்கவும். அகலமான பாத்திரத்தில், மாங்காய்த்துருவல், உப்பு, சர்க்கரை, பொடித்த வெந்தயக் கலவை, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்னர் அதை மெல்லிய துணியால் மூடி, வெயிலில் 5 நாட்கள் வைத்து எடுக்கவும். சர்க்கரை கரைந்து, மற்றவற்றுடன் கலந்து 'ஜாம்' பதத்தில் மாறியிருக்கும். குறிப்பு: இதைக் கெட்டியான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி வைத்தால், ஒரு வருடம் வரை கெடாமலிருக்கும்! ஆம் கா பப்பட் தேவையானவை: நன்றாக பழுத்த மாம்பழக்கூழ் - அரை கப், நெய், ஏலக்காய்த்தூள் 2 கால் -கப், சர்க்கரை ஸ்பூன், உப்பு -சிட்டிகை. செய்முறை: அகலமான பாத்திரத்தில் மாம்பழக்கூழ், சர்க்கரை, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கலவை இறுகி வரும்போது, நெய்த் தடவிய தட்டில் கொட்டி, மெல்லிய துணியால் மூடி, ...

தால்  சூப்

தேவையானவை: துவரம் பருப்பு - 1 கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் ஸ்பூன், துருவிய வெல்லம் 2 ஸ்பூன், பச்சைமிளகாய், பூண்டு - தலா 3, தக்காளி - 1, எண்ணெய் - 2 ஸ்பூன், சீரகம், கோடா மசாலா, மிளகாய்த்தூள், கடுகு தலா 1 ஸ்பூன், கொத்தமல்லித்தழை - கால் கப், கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள், குடம்புளி - 3 இதழ்கள். செய்முறை: துவரம் பருப்புடன், மஞ்சள்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து குழைய வேகவைக்கவும். உரித்த பூண்டுப் பற்கள், பச்சைமிளகாயை உரலில் இடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் இடித்த பூண்டு, துருவிய வெல்லம், தேவையான அளவு உப்பு, கரமசாலா, மிளகாய்த்தூள், வெந்த பருப்பு சேர்க்கவும். பின்னர் தண்ணீரில் புளியை கரைத்து (சற்றே’ நீர்க்க இருக்க வேண்டும்) ஊற்றி, கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கி, பரிமாறவும்.

க்ரிஸ்பி பட்டாணி வடை &முந்திரி ஜவ்வரிசி பாயசம் &பீஸ் வெஜ் பால் 

  க்ரிஸ்பி பட்டாணி வடை தேவையானவை: காய்ந்த பட்டாணி - 1 கப், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் தலா 1, பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு, துருவிய இஞ்சி, சோம்பு தலா 1 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா 3/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை 2 கொத்து, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பட்டாணியை குறைந்தது 8 மணி நேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். எண்ணெய் தவிர மற்ற பொருள்களை சேர்த்து, நன்றாகக் கலந்து, வடையாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போடவும். இருபுறமும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.  முந்திரி ஜவ்வரிசி பாயசம் தேவையானவை: பால் 1 லிட்டர், கடலைப்பருப்பு, ஜவ்வரிசி, முந்திரி - தலா கால் கப், நெய் 5 ஸ்பூன், ஜாதிக்காய்த்தூள் - 2 சிட்டிகை, துருவிய வெல்லம் கப், குங்குமப்பூ - அலங்கரிக்க. அரை செய்முறை: கடலைப்பருப்பு, ஜவ்வரிசியை குக்கரில் வேகவைக்கவும் (அதிகம் குழையக்கூடாது). அடி கனமான கடாயில் நெய் சேர்த்து, முந்திரியை (உடைக்காமல் முழுதாக போட்டு) சிவக்க வறுக்கவும். இதனுடன், வெ...

ஜ்வார்ச்சி பாக்ரி & ரவாய்ச்சே லாடு

ஜ்வார்ச்சி பாக்ரி தேவையானவை: சோளமாவு - 2 கப், ஓமம் - அரை ஸ்பூன், நெய் - 4 ஸ்பூன், புளிக்காத கெட்டித் தயிர் - எண்ணெய் - தேவைக்கு. 1 கப், உப்பு, செய்முறை: சோளமாவுடன் ஓமம், நெய், உப்பு, தயிர் சேர்த்துப் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அந்த மாவை அப்பளக்குழவியால் சற்றே கெட்டியான அப்பளமாக திரட்டவும். ஒரு பக்கம் தண்ணீர் தடவி, சூடான தவாவில் போடவும். ஒரு பக்கம் வெந்ததும் - மறுபக்கம் திருப்பிப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, சுட்டு எடுக்கவும். குறிப்பு: மகாராஷ்டிர மக்கள் குளிர்க்காலங்களில் இந்தப் பாக்ரியை செய்து, மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். ரவாய்ச்சே லாடு தேவையானவை: ரவை 1 கப், சர்க்கரை - முக்கால் கப், தேங்காய்த்துருவல் - கால் கப், பாதாம் - 10, நெய், சர்க்கரை சேர்க்காத கோவா கால் கப், குங்குமப்பூ ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன். 2 சிட்டிகை, - செய்முறை: வாணலியில் 4 ஸ்பூன் நெய்யுடன் ரவையை சேர்த்து நிறம் மாறாமல், வாசனை வரும் வரை வறுக்கவும். தேங்காய்த்துருவல், பாதாமை மிக்ஸியில் அரைத்து, கோவா, குங்குமப்பூ சேர்த்து கலந்து, சிறு உருண்டைகளாக்கவும். சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த...