இன்றைய அவசர உலகில் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை ரத்த சோகை மற்றும் உடல் சோர்வு. மாத்திரைகளை நாடுவதற்கு முன், நம் வீட்டிலேயே இருக்கும் சத்தான பொருட்களைக் கொண்டு ரத்தத்தின் அளவை எப்படி அதிகரிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம். 3. தேவையான பொருட்கள் (Ingredients List): * நிலக்கடலை - 100 கிராம் * உலர்ந்த திராட்சை - 100 கிராம் * முந்திரி பருப்பு - 100 கிராம் * பேரிச்சம் பழம் - 100 கிராம் * வெல்லம் - 25 கிராம் (தேவைக்கேற்ப) * வெண்ணெய் - 10 கிராம் 4. செய்முறை விளக்கம் (Step-by-Step Instructions): * முதலில் நிலக்கடலை மற்றும் முந்திரியை லேசாக வறுத்துக்கொள்ளவும் (இது சுவையைக்கூட்டும்). * பேரிச்சம் பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டுச் சிறு துண்டுகளாக நறுக்கவும். * மிக்ஸி ஜாரில் நிலக்கடலை, முந்திரி, திராட்சை, பேரிச்சை, வெல்லம் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும். * அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். * அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். * ஒரு சுத்தமான டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் (Fridge) வைத்துப் பாதுகாக்கவ...
ஜ்வார்ச்சி பாக்ரி
தேவையானவை: சோளமாவு - 2 கப், ஓமம் - அரை ஸ்பூன்,
நெய் - 4 ஸ்பூன், புளிக்காத கெட்டித் தயிர் - எண்ணெய் - தேவைக்கு. 1 கப், உப்பு,
செய்முறை: சோளமாவுடன் ஓமம், நெய், உப்பு, தயிர் சேர்த்துப் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் அந்த மாவை அப்பளக்குழவியால் சற்றே கெட்டியான அப்பளமாக திரட்டவும்.
ஒரு பக்கம் தண்ணீர் தடவி, சூடான தவாவில் போடவும். ஒரு பக்கம் வெந்ததும் - மறுபக்கம் திருப்பிப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: மகாராஷ்டிர மக்கள் குளிர்க்காலங்களில் இந்தப் பாக்ரியை செய்து, மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ரவாய்ச்சே லாடு
தேவையானவை: ரவை 1 கப், சர்க்கரை - முக்கால் கப்,
தேங்காய்த்துருவல் - கால் கப், பாதாம் - 10, நெய், சர்க்கரை சேர்க்காத கோவா கால் கப், குங்குமப்பூ ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன். 2 சிட்டிகை, -
செய்முறை: வாணலியில் 4 ஸ்பூன் நெய்யுடன் ரவையை சேர்த்து
நிறம் மாறாமல், வாசனை வரும் வரை வறுக்கவும். தேங்காய்த்துருவல், பாதாமை மிக்ஸியில் அரைத்து, கோவா, குங்குமப்பூ சேர்த்து கலந்து, சிறு உருண்டைகளாக்கவும். சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து சிறு கொதிக்கவிடவும். மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த ரவை சேர்த்து கிளறவும். இளகி வரும்போது அடுப்பை அணைத்து இறக்கி, இளம் சூட்டுடன் இருக்கும்போது, உருண்டைகளாகப் பிடிக்கவும். உருண்டையினுள்ளே பாதாமை வைத்து மூடி, மறுபடியும் உருண்டைகளாக்கி தட்டில்' அடுக்கவும்.
குறிப்பு: 'விநாயகர் சதுர்த்தி'க்கு இந்த லாடு விசேஷமாக செய்யப்படுகிறது!
கருத்துகள்
கருத்துரையிடுக