பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
ஜ்வார்ச்சி பாக்ரி
தேவையானவை: சோளமாவு - 2 கப், ஓமம் - அரை ஸ்பூன்,
நெய் - 4 ஸ்பூன், புளிக்காத கெட்டித் தயிர் - எண்ணெய் - தேவைக்கு. 1 கப், உப்பு,
செய்முறை: சோளமாவுடன் ஓமம், நெய், உப்பு, தயிர் சேர்த்துப் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் அந்த மாவை அப்பளக்குழவியால் சற்றே கெட்டியான அப்பளமாக திரட்டவும்.
ஒரு பக்கம் தண்ணீர் தடவி, சூடான தவாவில் போடவும். ஒரு பக்கம் வெந்ததும் - மறுபக்கம் திருப்பிப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: மகாராஷ்டிர மக்கள் குளிர்க்காலங்களில் இந்தப் பாக்ரியை செய்து, மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ரவாய்ச்சே லாடு
தேவையானவை: ரவை 1 கப், சர்க்கரை - முக்கால் கப்,
தேங்காய்த்துருவல் - கால் கப், பாதாம் - 10, நெய், சர்க்கரை சேர்க்காத கோவா கால் கப், குங்குமப்பூ ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன். 2 சிட்டிகை, -
செய்முறை: வாணலியில் 4 ஸ்பூன் நெய்யுடன் ரவையை சேர்த்து
நிறம் மாறாமல், வாசனை வரும் வரை வறுக்கவும். தேங்காய்த்துருவல், பாதாமை மிக்ஸியில் அரைத்து, கோவா, குங்குமப்பூ சேர்த்து கலந்து, சிறு உருண்டைகளாக்கவும். சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து சிறு கொதிக்கவிடவும். மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த ரவை சேர்த்து கிளறவும். இளகி வரும்போது அடுப்பை அணைத்து இறக்கி, இளம் சூட்டுடன் இருக்கும்போது, உருண்டைகளாகப் பிடிக்கவும். உருண்டையினுள்ளே பாதாமை வைத்து மூடி, மறுபடியும் உருண்டைகளாக்கி தட்டில்' அடுக்கவும்.
குறிப்பு: 'விநாயகர் சதுர்த்தி'க்கு இந்த லாடு விசேஷமாக செய்யப்படுகிறது!
கருத்துகள்
கருத்துரையிடுக