பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
பைங்கன் மசாலா
கத்தரிக்காய் 250 கிராம்.கொண்டைக்கடலை 100 கிராம் தக்காளி - 3, வெங்காயம். காய்ந்த மிளகாய் தலா 4.பூண்டு 10 பல் தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் தனியாஒரு மஞ்சந்தூள் சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு
மசாலா அரைக்க
தனியா காய்ந்த மிளகாய் தேங்காய்த்துருவல் மூன்றையும் ஒன்றாக வறுத்து பொடிக்கவும், கொண்டைக்கடலையை நன்றாக ஊறவைத்து வேகவைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் பூண்டு, நறுக்கிய கத்தரிக்காய் வேகவைந்த கொண்டைக்கடலை சேர்த்து வதக்கவும். பின்னர் வறுத்து பொடித்த பொடி மஞ்சள்தூன், 2 ஸ்பூன் எண்ணை சேர்த்து கிளறி இறக்கவும்.
முடக்கத்தான் ரசம்
தேவையானவை: முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி அளவு, ரசப்பொடி - ஒரு டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, நெய் தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம் பருப்பை குழைய வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, நெய்யில் வதக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, உப்பு, ரசப்பொடி, வதக்கிய முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பின்னர் துவரம் பருப்பு கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூளை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
தேவையானவை: முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி அளவு, ரசப்பொடி - ஒரு டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, நெய் தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம் பருப்பை குழைய வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, நெய்யில் வதக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, உப்பு, ரசப்பொடி, வதக்கிய முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பின்னர் துவரம் பருப்பு கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூளை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக