முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

Hi friends

  This  is My what's up  link  https://whatsapp.com/channel/0029VbB6fqB1CYoQqgy0md0E

பிஸிபேலா பாத்&ஆரஞ்சு சாதம்

 

பிஸிபேலா பாத்

செய்து செய்யவும். பொடிக்குத் தேவை: எண்ணெய் இல்லாமல் (ட்ரை ரோஸ்ட்) காஷ்மீரி சில்லி-10 எண்ணிக்கையில்)

(ஆயில் ஃப்ரை) தனியா - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்-சிறிது, க.பருப்பு-2 டேபிள் ஸ்பூன், உ.பருப்பு-2 டேபிள் ஸ்பூன், கசகசா-1 டேபிள் ஸ்பூன், கிராம்பு-10 கிராம், பட்டை-20 கிராம், சீரகம்-10 கிராம், வெந்தயம்-5 கிராம், பிரிஞ்சி இலை-2.

செய்முறை: அரிசி 1 கப், துவரம்பருப்பு 3/4 கப், குக்கரில் குழைய வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, முந்திரி, புளித் தண்ணீர், வெல்லம், நீர் விட்டு கொதிக்க விடவும். மஞ்சள்தூள், வேகவைத்த அரிசி, பருப்பு சேர்க்கவும். கொதிக்க விடவும். பிறகு பொடி உப்பு, பெருங்காயம் சேர்த்து பச்சைக் கொத்தமல்லிச் சேர்த்து இறக்கி விடவும். நெய் கொஞ்சம் சேர்க்கவும்.

இதற்கு தயிர் பச்சடி, சிப்ஸ், வடாம் நன்றாக இருக்கும்.


ஆரஞ்சு சாதம்



தேவையானவை: பாசுமதி அரிசி-1 கப், தண்ணீர்-1 கப், கமலா ஆரஞ்சு சாறு-1 கப், பட்டை -1, ஏலம்-2, கிராம்பு-2, பிரிஞ்சி இலை-2, சர்க்கரை-2 டீஸ்பூன், உப்பு, முந்திரி-7, 8 (எண்ணிக்கை), திராட்சை-1 டேபிள் ஸ்பூன், நெய்-2 டேபிள் ஸ்பூன், ஆரஞ்சு தோல்-1 டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் நெய் விட்டு மசாலா சாமான்களை வறுக்கவும். முந்திரி, திராட்சையை வறுக்கவும். அரிசியைக் கழுவி ஊறவைத்து (20 நிமிடம்) வடிகட்டி லேசாக வறுக்கவும். 1 கப் தண்ணீர் விடவும். பாதி வெந்தபிறகு 1 கப் ஆரஞ்சு சாறு சேர்த்து உப்பு, சர்க்கரை சேர்க்கவும். குறைவான தீயில் மூடி போட்டு வேகவிடவும்.  சிறிது நேரத்தில் ஆரஞ்சு சாதம் ரெடி



கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...