பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
பஞ்சதானிய
குழம்பு
தேவையானவை:
பச்சைப்பயறு, கொள்ளு, சிவப்புகாராமணி, கொண்டைக்கடலை, பட்டாணி - தலா கால் கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப், தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: கசகசா - அரை டீஸ்பூன், முந்திரி-10, சோம்பு-1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தோல்சீவிய இஞ்சி - 1 அங்குலத்துண்டு, பூண்டு - 10 பல், உப்பு - சிறிதளவு.
பஞ்சதானிய
குழம்பு
செய்முறை:
அனைத்து தானியங்களையும் முதல் நாள் இரவே தனி, தனியாக ஊற வைக்கவும். மறுநாள் அனைத்தையும் ஒன்றாக குக்கரில் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். முந்திரி, கசகசா இரண்டையும் தனித்தனியாக 15 நிமிடம் ஊறவைத்து, அதனுடன் அரைக்க கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுது, தக்காளி சாஸ், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். பின்னர் வேக வைத்த தானியங்களை சேர்த்து. 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக