இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...
பஞ்சதானிய
குழம்பு
தேவையானவை:
பச்சைப்பயறு, கொள்ளு, சிவப்புகாராமணி, கொண்டைக்கடலை, பட்டாணி - தலா கால் கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப், தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: கசகசா - அரை டீஸ்பூன், முந்திரி-10, சோம்பு-1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தோல்சீவிய இஞ்சி - 1 அங்குலத்துண்டு, பூண்டு - 10 பல், உப்பு - சிறிதளவு.
பஞ்சதானிய
குழம்பு
செய்முறை:
அனைத்து தானியங்களையும் முதல் நாள் இரவே தனி, தனியாக ஊற வைக்கவும். மறுநாள் அனைத்தையும் ஒன்றாக குக்கரில் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். முந்திரி, கசகசா இரண்டையும் தனித்தனியாக 15 நிமிடம் ஊறவைத்து, அதனுடன் அரைக்க கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுது, தக்காளி சாஸ், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். பின்னர் வேக வைத்த தானியங்களை சேர்த்து. 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக