This is My what's up link https://whatsapp.com/channel/0029VbB6fqB1CYoQqgy0md0E
பஞ்சதானிய
குழம்பு
தேவையானவை:
பச்சைப்பயறு, கொள்ளு, சிவப்புகாராமணி, கொண்டைக்கடலை, பட்டாணி - தலா கால் கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப், தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: கசகசா - அரை டீஸ்பூன், முந்திரி-10, சோம்பு-1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தோல்சீவிய இஞ்சி - 1 அங்குலத்துண்டு, பூண்டு - 10 பல், உப்பு - சிறிதளவு.
பஞ்சதானிய
குழம்பு
செய்முறை:
அனைத்து தானியங்களையும் முதல் நாள் இரவே தனி, தனியாக ஊற வைக்கவும். மறுநாள் அனைத்தையும் ஒன்றாக குக்கரில் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். முந்திரி, கசகசா இரண்டையும் தனித்தனியாக 15 நிமிடம் ஊறவைத்து, அதனுடன் அரைக்க கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுது, தக்காளி சாஸ், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். பின்னர் வேக வைத்த தானியங்களை சேர்த்து. 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக