இன்றைய அவசர உலகில் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை ரத்த சோகை மற்றும் உடல் சோர்வு. மாத்திரைகளை நாடுவதற்கு முன், நம் வீட்டிலேயே இருக்கும் சத்தான பொருட்களைக் கொண்டு ரத்தத்தின் அளவை எப்படி அதிகரிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம். 3. தேவையான பொருட்கள் (Ingredients List): * நிலக்கடலை - 100 கிராம் * உலர்ந்த திராட்சை - 100 கிராம் * முந்திரி பருப்பு - 100 கிராம் * பேரிச்சம் பழம் - 100 கிராம் * வெல்லம் - 25 கிராம் (தேவைக்கேற்ப) * வெண்ணெய் - 10 கிராம் 4. செய்முறை விளக்கம் (Step-by-Step Instructions): * முதலில் நிலக்கடலை மற்றும் முந்திரியை லேசாக வறுத்துக்கொள்ளவும் (இது சுவையைக்கூட்டும்). * பேரிச்சம் பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டுச் சிறு துண்டுகளாக நறுக்கவும். * மிக்ஸி ஜாரில் நிலக்கடலை, முந்திரி, திராட்சை, பேரிச்சை, வெல்லம் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும். * அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். * அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். * ஒரு சுத்தமான டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் (Fridge) வைத்துப் பாதுகாக்கவ...
கோதுமை மாவு, தேங்காய்த்துருவல் - தலா 1 கப், மைதா மாவு - 3 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள், நல்லெண்ணெய், வாழை இலை - தலா சிறிதளவு.
தேவையானவை:
செய்முறை: அகலமான பேசினில் கோதுமை மாவு, மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் தளர்வாகப் பிசைந்து, அதன் மேல் நல்லெண்ணெய் முழுவதையும் ஊற்றி 3 மணி நேரம் மூடி வைக்கவும். தேங்காய்த்துருவலை மிக்ஸியில் போட்டு, அதனுடன் ஏலக்காய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்த விழுதை வெறும் வாணலியில் கொட்டி, ஈரம் வற்றும் வரை வறுக்கவும்.. பின் அந்த கலவையை ஆற வைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்து வைத்துள்ள கோதுமை மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து வட்டமாக தட்டவும். அதன் நடுவில் தேங்காய் பூரண உருண்டையை வைத்து மூடி மறுபடியும் வட்டமாக தட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு வாழை இலையை எடுத்து விடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் மேலே நெய் தடவி பறிமாறவும்.
அரைத்த பஜ்ஜி
தேவையானவை: புழுங்கல் அரிசி, கடலை மாவு தலா 1 கப், துவரம் பருப்பு <-1 டீஸ்பூன், வாழைக்காய், பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு. கத்தரிக்காய் (நான்கும் தோல் சீவி வட்டமாக மெலிதாக நறுக்கியது) தலா 4 துண்டுகள், காய்ந்த மிளகாய் - 3, தோசைமாவு,ங்காயத்தூள், கறிவேப்பிலை
செய்முறை..புழுங்கல் அரிசியுடன் துவரம்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். பின்லர் அதனுடன் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பாதியளவு நைஸாக அரைக்கவும். பின்னர் அதனுடன் கடலைமாவு, தோசை மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக