ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
கோதுமைரவை இட்லி
தேவையானவை: கோதுமை ரவை - 250 கிராம், தயிர் - 700 கிராம்.
(கேரட்+பீன்ஸ் + உகிழங்கு + கோஸ் + முள்ளங்கி அனைத்தும் சேர்த்து 150 கிராம். மிகச் சன்னமாக கட்செய்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்), பமிளகாய் 5, இஞ்சி, பெ.வெங்காயம் (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை. உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: ரவையுடன் தயிர், வேக வைத்த காய்கறிகள், பெ.வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லி இழை அனைத்தும் சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி 20 நிமிடம் கழித்து இறக்கவும்.
அவல்இட்லி
தேவையானவை: புழுங்கல் அரிசி
ஒரு கப், பச்சரிசி. ஒரு ஒரு கப், கருப்பு உளுந்து - கால் கப், உப்பு தேவைக்கேற்ப
செய்முறை: அரிசி, அவல், உளுந்தை கழுவி தனித்தனியாக 6 மணிநேரம் ஊறவைக்கவும். வழக்கமான இட்லி மாவு பதத்திற்கு இதை அரைத்து 12 மணிநேரம் புளிக்க வைத்து இடலி வார்க்கவும்.
ஒரு கப், பச்சரிசி. ஒரு ஒரு கப், கருப்பு உளுந்து - கால் கப், உப்பு தேவைக்கேற்ப
செய்முறை: அரிசி, அவல், உளுந்தை கழுவி தனித்தனியாக 6 மணிநேரம் ஊறவைக்கவும். வழக்கமான இட்லி மாவு பதத்திற்கு இதை அரைத்து 12 மணிநேரம் புளிக்க வைத்து இடலி வார்க்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக