அட்டகாசமான ரெசிபி! முட்டைக்கோஸ் மசாலா பொதுவாகச் சற்றே நீர்விட்டுச் செய்யும் பொரியலாகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் இதில் பொட்டுக்கடலை மற்றும் மசாலாக்களை அரைத்துச் சேர்த்துச் செய்வதால், இது சப்பாத்தி, பூரி மற்றும் புலாவ் வகைகளுக்கு ஒரு அருமையான சைடு டிஷ்ஷாக (Side Dish) இருக்கும். சுவையான மற்றும் வித்தியாசமான முட்டைக்கோஸ் மசாலா. முட்டைக்கோஸில் வழக்கமான பொரியல் செய்து சலித்துவிட்டதா? இதோ உங்களுக்காக ஹோட்டல் ஸ்டைலில் ஒரு முட்டைக்கோஸ் மசாலா. இது சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு மிகச்சிறந்த காம்போ! தேவையான பொருட்கள்: * முட்டைக்கோஸ் - 2 கப் (பொடியாக நறுக்கியது) * வெங்காயம் - 3 * தக்காளி - 3 * பொட்டுக்கடலை - 1 கப் * பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 * பச்சை மிளகாய் - 1 * மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் * மல்லித்தூள் - 1 ஸ்பூன் * சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் * மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் * எண்ணெய் / நெய் - 3 ஸ்பூன் * சீரகம் - 1/2 ஸ்பூன் * உப்பு - தேவையான அளவு செய்முறை விளக்கம்: * வதக்கிக் கொள்ளவும்: வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொன...
கோதுமை மாவு, தேங்காய்த்துருவல் - தலா 1 கப், மைதா மாவு - 3 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள், நல்லெண்ணெய், வாழை இலை - தலா சிறிதளவு.
தேவையானவை:
செய்முறை: அகலமான பேசினில் கோதுமை மாவு, மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் தளர்வாகப் பிசைந்து, அதன் மேல் நல்லெண்ணெய் முழுவதையும் ஊற்றி 3 மணி நேரம் மூடி வைக்கவும். தேங்காய்த்துருவலை மிக்ஸியில் போட்டு, அதனுடன் ஏலக்காய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்த விழுதை வெறும் வாணலியில் கொட்டி, ஈரம் வற்றும் வரை வறுக்கவும்.. பின் அந்த கலவையை ஆற வைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்து வைத்துள்ள கோதுமை மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து வட்டமாக தட்டவும். அதன் நடுவில் தேங்காய் பூரண உருண்டையை வைத்து மூடி மறுபடியும் வட்டமாக தட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு வாழை இலையை எடுத்து விடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் மேலே நெய் தடவி பறிமாறவும்.
அரைத்த பஜ்ஜி
அரைத்த பஜ்ஜி தேவையானவை:
புழுங்கல் அரிசி, கடலை மாவு தலா 1 கப், துவரம் பருப்பு <-1 டீஸ்பூன், வாழைக்காய், பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு. கத்தரிக்காய் (நான்கும் தோல் சீவி வட்டமாக மெலிதாக நறுக்கியது) தலா 4 துண்டுகள், காய்ந்த மிளகாய் - 3, தோசைமாவு,ங்காயத்தூள், கறிவேப்பிலை
செய்முறை..புழுங்கல் அரிசியுடன் துவரம்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். பின்லர் அதனுடன் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பாதியளவு நைஸாக அரைக்கவும். பின்னர் அதனுடன் கடலைமாவு, தோசை மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக