ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
கார்ன் பக்கோடா
தேவையானவை: பேபிகார்ன் 20, ஆய்ந்த முருங்கைக் கீரை, பொட்டுக்கடலை கப், சோம்பு - தலா அரை அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது --தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 2, நறுக்கிய கொத்துமல்லித்தழை ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: பேபிகார்னை சிறியதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலை, சோம்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடிக்கவும். இதனுடன் நறுக்கிய பேபிகார்ன், வெங்காயம், கொத்துமல்லித்தழை, முருங்கைக்கீரை, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து... காய்ந்த எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக