பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
சீரக சம்பா அரிசி - 1 கப்பு கல்கண்டு - 2 கப், பால் - 3 கப், முந்திரி - 10, குங்குமப்பு - சிறிதளவு நெய் - 5 கப், செய்முறைசீரக சம்பா அரிசியை, 3 கப் பால் சேர்த்து, குழைய வேகவைத்து, மசிக்கவும்..
கல்கண்டுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கெட்டி பாகு கொதிக்கும்போது, மசித்த சாதம் சேர்த்து கலக்கவும். குங்குமப்பூ சேர்க்கவும். ஸ்பூன் நெய்யில் முந்திரி சேர்த்து, வறுத்து சேர்க்கவும். மீதமுள்ள நெய் சேர்த்து, நன்கு கலந்து, அடுப்பை அணைக்கவும்.
உளுந்தங்களி
தேவையானவை: முழு கறுப்பு உளுந்து, பச்சரிசி தலா ஒரு ஆழாக்கு, பொடித்த கருப்பட்டி 250 கிராம், வெந்தயம் கால் டீஸ்பூன்,
செய்முறை: வெறும் வாணலியில் முழு உளுந்து, வெந்தயம் இரண்டையும் போட்டு வறுத்து ஆறவைக்கவும், இதனுடன் பச்சரிசியை சேர்த்து மானக திரித்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரம் ஒன்றில் கருப்பட்டியைப் போட்டு பாகு காய்ச்சவும். அதில் திரித்து வைத்துள்ள மாவை கொஞ்சம், கொஞ்சமாகத் தூவிக் கிளறவும். பின்னர் வேகவிடவும், சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே இறக்கி சூடாகப் பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக