முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

Hi friends

  This  is My what's up  link  https://whatsapp.com/channel/0029VbB6fqB1CYoQqgy0md0E

வெஜிடபுள் பரோட்டா with நெல்லிக்காய் ஜூஸ்

           வெஜிடபுள் பரோட்டா  

                           with   

              நெல்லிக்காய் ஜூஸ்

 தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், துருவிய முட்டைக் கோஸ் -ஒரு கப், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை, நெய் தலா கால் கப், சோள மாவு 2 டீஸ்பூன், தனியாத்தூள், மிளகாய்த்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் -தேவையான அளவு.


  செய்முறை: கோதுமை மாவு, சோளமாவுடன் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, சிறிது நேரம் ஊற வைக்கவும்.


  வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய மு.கோஸ், கேரட், த.தூள், மி.தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். காய்கள் வெந்ததும் கொ.ம.தழை தூவி கிளறி இறக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக இட்டு அதன் நடுவில் வதக்கிய காய்கறிக் கலவையை வைத்து, மூடி, பிறகு மெல்லிய வட்டங்களாக தட்டிக் கொள்ளவும். இதை காய்ந்த தவாவில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு திருப்பிப் போட்டு சிவக்க வந்ததும் எடுத்து பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.

           நெல்லிக்காய் ஜூஸ்

  தேவையானவை: பெரிய சைஸ் நெல்லிக்காய் - ஒரு கிலோ, பனை வெல்லம் - முக்கால் கிலோ, ஏலக்காய், ஓமம், திப்பிலி, பட்டை - தலா 5 கிராம்.


  செய்முறை: நெல்லிக்காயை நன்றாகக் கழுவி ஈரம் போக துணியில் ஒற்றி எடுக்கவும். ஏலக்காய், ஓமம், திப்பிலி, பட்டை பொடித்துக் கொள்ளவும். சுத்தமான ஜாடியில் நெல்லிக்காயை முதலில் போட்டு, அதன் மேல் பனைவெல்லம் போடவும். இப்படி மாறி, மாறி நெல்லிக்காய், பனைவெல்லம் வருவதுபோல் ஜாடியை நிரப்பி, இறுதியாக பொடித்த பொடியை சேர்த்து மூடவும். இதை 5 நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட்டு 30 நாட்கள் வரை வைத்திருந்தால் நெல்லிச்சாறு முழுவதும் வெல்லத்தில் இறங்கி, நெல்லிக்காய் சக்கையாக மிதக்கும். பின்னர் அதை வடிகட்டி சக்கையை எடுத்து அந்த சாற்றை சுத்தமான வேறொரு பாட்டிலில் ஊற்றி மூடி வைத்துவிடவும். இதை காலையில் ஒரு டீஸ்பூன் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளித் தொந்தரவு இருக்காது. வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் நெல்லிச் சாறு சேர்த்து ஜூஸ் மாதிரி கொடுக்கலாம்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...