பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
ரவா 1 கப்.வாணலியில் லேசாக வருக்கவும். குக்கர்ல கொஞ்சம் எண்ணைய் போடுங்க. அதில் கடுகு .காஞ்ச மிளகாய். இஞ்சி. கடலைப்பருப்பு போடுங்க. 4 டம்ளர் தண்ணி வையுங்க. கொஞ்சம் தண்ணீர் கொதி வந்ததும். ரவாவை போட்டு கைவிடாமல் கிண்டவும். 4 முந்திரி பருப்பை நைசா அரைத்து கஞ்சியில் கலந்து விடுங்கள். லேசா ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கி வையுங்க.சூப்பரான ரவா கஞ்சி ரெடி. நமக்கு காய்ச்சல் அடிக்கும் போது .வாய்க்கு எது சாப்பிட்டாலும் நல்லா இருக்காது அந்த சமயத்துல நல்லா சாப்பிட சொல்லி சொன்னா பிடிக்காது. அந்த நேரத்துல இந்த ரவா கஞ்சி ஈசியா சீக்கிரமாக வச்சு சாப்பிடலாம். கொஞ்சம் காரமாஇருக்கும். இந்தக் கஞ்சி குடிக்கும் போது உடம்பு கொஞ்சம் ஹெல்தியாய் இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக