ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
ஈரல்-மிளகு வறுவல் தேவையானவை ஆட்டு ஈரல் கால் கிலோ, மஞ் சள்தாள், சீரகம் - தலா அரை டீஸ்பூன், தனியாத்தாள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன். இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 7 பல். கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: ஈரலுடன் தனியாத்தூள், சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டுடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு, சீரக விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் ஊற வைத்த ஈரலை சேர்த்து, அதனுடன் மீதமுள்ள மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். ஈரல் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து வரும்போது, கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். கடாய் சிக்கன் தேவையானவை: சிக்கன் - அரை கிலோ, வெங்காயம், தக்காளி - தலா 2. இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி, நெய் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவ...