அவல் ஒரு கப் எடுத்து லேசாக வறுக்கவும். ஒன்னு ரெண்டா கையாலேயே உடைத்து விட்டுங்க.குக்கர்ல அவல் போட்டு. ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் வையுங்கள். பிறகு அதில் 2 கப் வெல்லம் சேருங்கள். ஒரு சின்ன வாணலியை அடுப்பில் வைத்து அதில் நாலு ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும். முந்திரிப்பருப்பு. திராட்சை வறுத்து அதில் போடுங்க.ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்.ஒரு துளி உப்பு.அரை டம்ளர் பால்சேர்க்கவும்.இவை அனைத்தையும் குக்கரில் வேக வைத்திருக்கும் அவல் பயத்துல மிக்ஸ் பண்ணுங்க.கைவிடாமல் கிளறுங்கள் கொஞ்சம் கெட்டியானதும்.ஒரு டம்ளர் எடுத்து பரிமாறவும்.அவல் பாயசம் ரெடி குக்கரை அடுப்பில் வைங்க 5 ஸ்பூன் எண்ணைய் விடுங்க சூடானதும்.கடுகு அரை டீஸ்பூன். கடலைப்பருப்பு அரை டீஸ்பூன். பச்சை மிளகாய் 5 கீறிப் போட்டு ங்கு 5 வெங்காயம். பீன்ஸ்.கேரட். உருளைக்கிழங்கு. உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் ஒரு கப் நைஸாக அரிந்து அதில் சேர்த்து வதக்கவும். பிறகு வரகரிசி சேர்த்து வதக்குங்கள்.1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் விட்டு.தேவையானஅளவு உப்பு. கருவேப்பிலை சேர்த்து. குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும். அடுப்பை அனைத்துவிடடு. பிறகு 10 நி...
கேரட் - பீஸ் குருமா &கேரட் - ஆனியன் ஸ்பைசி சட்னி &கேரட் - பெப்பரி மக்ரோனி &கேப்ஸிகம் ரைஸ்,&கேரட் - மக்ரோனி பாயசம்
கேரட் - பீஸ் குருமா தேவையானவை: சிறிய சதுரங்களாக நறுக்கிய கேரட் - 1 கப், காய்ந்த வெள்ளை பட்டாணி - 1 கப் (ஊறவைத்து வேகவைக்கவும்), நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், தக்காளி - 2, பச்சைமிளகாய் - 1, தேங்காய்த்துருவல் - 1/4 கப், இஞ்சி-பூண்டு விழுது 3/4 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை, கசூரி மேத்தி - சிறிதளவு, சாம்பார்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சோம்பு - 1/4 டீஸ்பூன், முழு முந்திரி - 4, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கு. செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் கேரட், நறுக்கிய தக்காளி மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கி, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய்த்துருவல், முந்திரி, மிளகாய், சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து, 1 கொதித்து கொண்டிருக்கும் குருமாவில் ஊற்றவும். நன்றாக சேர்ந்து வரும்போது, கரம் மசாலா சேர்த்துக் கொதிக்கவிடவும். கொத்துமல்லித்தழை, கசூரி மேத்தி தூ...