ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
மம்மிடிகாய பெசர பச்சடி&ஆந்திரா பப்பு&கோங்கூரா, பச்சடி&ஆந்திரா கன் பவுடர்&மம்மிடிகாய பப்பு&தோட்ட கூற பப்பு
மம்மிடிகாய பெசர பச்சடி தேவையானவை: சதுரங்களாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - முக்கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், சீரகம் - அரை டீஸ்பூன், வரமிளகாய் - 3, வெல்லம் - அரை டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் - தேவைக்கு, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு -ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயம் - ஒரு சிட்டிகை. செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் சீரகம், வரமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும், பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகைப் போட்டு பொரிய விடவும். பின்னர் உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, உளுந்து பொன்னிறமாகும் வரை வதக்கி, பச்சடியில் கலக்கவும். சூடான சாதத்துடன் நெய் சேர்த்து பரிமாறவும். ஆந்திரா பப்பு தேவையானவை: துவரம் பருப்பு - ஒரு கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பூண்டு -5 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 5, வரமிளகாய் - 2, சின்ன வெங்காயம் 10, பெரிய சைஸ் தக்காளி...