பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
மம்மிடிகாய பெசர பச்சடி&ஆந்திரா பப்பு&கோங்கூரா, பச்சடி&ஆந்திரா கன் பவுடர்&மம்மிடிகாய பப்பு&தோட்ட கூற பப்பு
மம்மிடிகாய பெசர பச்சடி தேவையானவை: சதுரங்களாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - முக்கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், சீரகம் - அரை டீஸ்பூன், வரமிளகாய் - 3, வெல்லம் - அரை டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் - தேவைக்கு, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு -ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயம் - ஒரு சிட்டிகை. செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் சீரகம், வரமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும், பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகைப் போட்டு பொரிய விடவும். பின்னர் உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, உளுந்து பொன்னிறமாகும் வரை வதக்கி, பச்சடியில் கலக்கவும். சூடான சாதத்துடன் நெய் சேர்த்து பரிமாறவும். ஆந்திரா பப்பு தேவையானவை: துவரம் பருப்பு - ஒரு கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பூண்டு -5 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 5, வரமிளகாய் - 2, சின்ன வெங்காயம் 10, பெரிய சைஸ் தக்காளி...