இன்றைய அவசர உலகில் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை ரத்த சோகை மற்றும் உடல் சோர்வு. மாத்திரைகளை நாடுவதற்கு முன், நம் வீட்டிலேயே இருக்கும் சத்தான பொருட்களைக் கொண்டு ரத்தத்தின் அளவை எப்படி அதிகரிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம். 3. தேவையான பொருட்கள் (Ingredients List): * நிலக்கடலை - 100 கிராம் * உலர்ந்த திராட்சை - 100 கிராம் * முந்திரி பருப்பு - 100 கிராம் * பேரிச்சம் பழம் - 100 கிராம் * வெல்லம் - 25 கிராம் (தேவைக்கேற்ப) * வெண்ணெய் - 10 கிராம் 4. செய்முறை விளக்கம் (Step-by-Step Instructions): * முதலில் நிலக்கடலை மற்றும் முந்திரியை லேசாக வறுத்துக்கொள்ளவும் (இது சுவையைக்கூட்டும்). * பேரிச்சம் பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டுச் சிறு துண்டுகளாக நறுக்கவும். * மிக்ஸி ஜாரில் நிலக்கடலை, முந்திரி, திராட்சை, பேரிச்சை, வெல்லம் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும். * அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். * அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். * ஒரு சுத்தமான டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் (Fridge) வைத்துப் பாதுகாக்கவ...
ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி
ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...