முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

Hi friends

  This  is My what's up  link  https://whatsapp.com/channel/0029VbB6fqB1CYoQqgy0md0E

தக்காளி - கிரீம் சூப்&தொண்டக்காய வெபுடு&அல்லம் பச்சடி

 தக்காளி - கிரீம் சூப்


தேவையானவை:


தக்காளி - 12, வெங்காயம், செலரி இலை, கேரட் தலா இன்று, பூண்டு - 3 பல், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, மிளகு - 4, ஃபிரெஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:


வாணெலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெயை சூடாக்கிக் கொள்ளவும். இதில் பிரிஞ்சி இலை, நறுக்கிய வெங்காயம், பூண்டு, செலரி இலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட், தக்காளி, உப்பு, மிளகு சேர்த்து வதக்கி, கலவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கும் போது பிரிஞ்சி இலை மற்றும் மிளகை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, வடிகட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பின்னர் உப்பு, மிளகுத்தூள், ஃபிரெஷ் கிரீம் சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்


தொண்டக்காய வெபுடு


தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவைக்கு, வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு -ஒரு டீஸ்பூன்.


வறுத்து அரைக்க: வரமிளகாய் - 5, சீரகம் - அரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, தனியா ஒரு டீஸ்பூன்.


செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து,


சிறிதளவு உப்பு சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். கோவைக்காயையும்


வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகைப் போட்டு பொரிய விடவும். பின்னர் உளுந்தம் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து சற்றே பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய கோவைக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, காய் நன்றாக வேகும் வரை மூடி வைத்து சமைக்கவும். பின்னர் வறுத்து அரைத்தப் பொடியைத் தூவி, 10 நிமிடம் வரை நன்றாக வதக்கி இறக்கவும். சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.


அல்லம் பச்சடி


தேவையானவை: இஞ்சி - 2 இன்ச், எண்ணெய் - தேவைக்கு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வெல்லம் - தலா ஒரு டீஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, வரமிளகாய் - 5, வெந்தயம் - கால் டீஸ்பூன்.


தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயம் ஒரு சிட்டிகை.


செய்முறை: இஞ்சியை சிறியத் துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்


ஊற்றி, காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கிள்ளிய வரமிளகாய், வெந்தயம் சேர்த்து, பருப்புகள் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் இஞ்சி, புளியைச் சேர்த்து, இஞ்சி பொன்னிறமாகி, சற்றே சுருங்கும் வரை வதக்கி, அனைத்தையும் மிக்ஸியில் போடவும். பின்னர் அவற்றுடன் வெல்லம், உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி, பச்சடியில் கொட்டி, பரிமாறவும்

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...