முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

Engineering & CAD Design Services in Chennai | The CAD Company

https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...

பச்சி புலுசு&பீரக்காய தொக்கு பச்சடி&பாபு அன்னம்&ஆந்திரா பெசரட்டு&புலகம்

 பச்சி புலுசு


தேவையானவை: புளி - எலுமிச்சை அளவு, பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு டீஸ்பூன், வெல்லம் - ஒன்றரை டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப்.


தாளிக்க: கடுகு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன்.


செய்முறை: புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, புளித்தண்ணி


தயார் செய்யவும். அந்த புளித்தண்ணீரில் வெல்லம், உப்பு சேர்த்து கலக்கவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி, நசுக்கி, புளித்தண்ணி சேர்த்துக் கலக்கவும். பின்னர் கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழையை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை தாளித்துக் கொட்டவும் அரை மணிநேர இட்லி பருப்பு சாதம், வெண் பொங்கல் என இவற்றில் புதாவது ஒரு உணவுடன் பச்சி புலுகவை பரிமாறலாம்.


பீரக்காய தொக்கு பச்சடி


தேவையானவை:


பீர்க்கங்காய் - ஒன்று, சீரகம்


அரை டீஸ்பூன், பூண்டு 4 பல், பச்சைமிளகாய் - 3, தக்காளி - ஒன்று, வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.


தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு, உளுந்து - ஒரு டீஸ்பூன்,


வரமிளகாய் - ஒன்று, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு கொத்து.


செய்முறை: பீர்க்கங்காயின் தோலை சீவவும். சற்றே தடிமனான தோலை நீக்கி விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, பீர்க்கங்காயின் தோலை சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும். பின்னர் அதை தனியே எடுத்து ஆறவைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சீரகத்தைப் போட்டு பொரிந்ததும், உரித்த பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமானதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி மிக்ஸியில் போடவும். அதனுடன் உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஆறவைத்த பீர்க்கைத்தோல் கலவை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும், காய்ந்த எண்ணெயில் கடுகை தாளித்து, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். உளுந்து பொன்னிறமானதும், பச்சடியில் கொட்டி, சூடாகப் பரிமாறவும்


பாபு அன்னம்


தேவையானவை: வேகவைத்த சாதம் - 2 கப், கடுகு, சீரகம் - தலா அரை


டீஸ்பூன், உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வரமிளகாய், பச்சைமிளகாய் - தலா 2, எண்ணெய் - தேவைக்கு, வெங்காயம் ஒன்று, பூண்டு - 2 பல், உப்பு - தேவைக்கு, கொத்துமல்லித்தழை - சிறிதளவு.


செய்முறை: வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கிள்ளிய வரமிளகாய், கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து, பருப்புகள் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து. வெங்காயம் பொன்னிறமானதும், சாதத்தைச் சேர்த்துக் கிளறி, நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.


ஆந்திரா பெசரட்டு


தேவையானவை: பச்சைப்பயறு -ஒரு கப், பச்சரிசி - அரை கப், இஞ்சி -


ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் 6,உப்பு - தேவைக்கு, பெரிய வெங்காயம் - 2, கொத்துமல்லித்தழை - 2 டீஸ்பூன்.


செய்முறை : பெரிய வெங்காயத்தையும் கொத்துமல்லித்தழையையும்


பொடியாக நறுக்கி, ஒன்றாகக் கலந்து, தனியாக வைக்கவும். பச்சரிசியையும் பச்சைப்பயறையும் மூன்று மணி நேரம் தனித்தனியாக ஊறவைத்து, அவற்றுடன் இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து தோசை மாவுப் பதத்திற்கு அரைக்கவும். இந்த மாவில் தோசை வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிடவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லித்தழை கலவையைத் தூவி, மடித்து எடுத்து, சூடாகப் பரிமாறவும், இந்த பெசரட்டுடன் தொட்டுக்கொள்ள 'அல்லம் பச்சடி ஏற்றது.


புலகம்


தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், தண்ணீர் -3 கப், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 12, நெய் - ஒன்றரை டீஸ்பூன்.


செய்முறை: பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் வெறும் வாணலியில்


தனித்தனியாகப் போட்டு, வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் கழுவி, 3 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து, ஊறவைத்த அரிசி - பருப்புக் கலவையில் கொட்டி, குக்கரை அடுப்பில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, முந்திரியை பொன்னிறமாக வறுத்து, வேகவைத்த புலகத்தில் கொட்டிக் கிளறவும், மாங்காய் ஊறுகாய் அல்லது தக்காளித் தொக்குடன் சூடாகப் பரிமாறவும்.


குறிப்பு: காலை நேர பரபரப்பிலும் இந்த கிச்சடியை குறைந்த நேரத்திலேயே சுலபமாகச் செய்து முடித்து விடலாம்!

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...