முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

உக்கனி&கர்ஜிகாய&பூர்னாலு&பொப்பட்லு

 உக்கனி


தேவையானவை: பொரி - 5 கப், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெரிய வெங்காயம் - 2, வறுத்த வேர்க்கடலை - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள், கொத்துமல்லித்தழை - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கு, பொட்டுக்கடலை -ஒரு கைப்பிடி


தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு -ஒரு டீஸ்பூன்.


செய்முறை: ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, மூன்று நிமிடம் ஊறவைத்துப் பிழிந்து, தனியாக வைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, பருப்புகள் பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து சற்றே பொன்னிறமாக வதக்கவும். பின்னர் வறுத்த வேர்க்கடலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் ஊறவைத்துப் பிழிந்து வைத்துள்ளப் பொரியைச் சேர்த்து, மூன்று நிமிடம் வதக்கி, பொட்டுக்கடலைப் பொடி மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி, சூடாக பரிமாறவும்.


குறிப்பு: இந்த 'பொரி உப்புமாவை ஒரு தக்காளியை நறுக்கிச் சேர்த்தும் செய்யலாம். ஒரு கேரட்டை துருவியும் சேர்க்கலாம்.


கர்ஜிகாய


தேவையானவை: மைதா மாவு


ஒரு கப், ரவை வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. 2 டீஸ்பூன், உருக்கிய


பூரணம் செய்ய: பொட்டுக்கடலை, சர்க்கரை - தலா அரை கப், முந்திரி, பாதாம், பூசணி விதை - தலா 12.


செய்முறை: பொட்டுக்கடலையையும் சர்க்கரையையும் தனித்தனியாக மிக்ஸியில்


போட்டு பவுடராக்கவும். பின்னர் இரண்டையும் ஒன்றாகக் கலந்து, பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பூசணி விதையைக் கலந்தால் 'பூரணம்' ரெடி! அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, உப்பு, உருக்கிய வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, மாவை கெட்டியாகப் பிசையவும். அரை மணி நேரம் கழித்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, வட்டமாகத் தேய்த்து, அதை அப்படியே கொழுக்கட்டை அச்சில் வைக்கவும். பின்னர் சிறிதளவு பூரணத்தை வைத்து மூடவும். ஓரங்களில் தண்ணீரை தொட்டு வைத்து, நன்றாக மூடவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரெடி செய்து வைத்துள்ளவற்றை போட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.


பூர்னாலு


தேவையானவை: அரிசி, கடலைப்பருப்பு, வெல்லம் தலா ஒரு கப், உளுந்தம் பருப்பு - அரை கப், உப்பு - தேவைக்கு, தேங்காய்த்துருவல் - கால் கப்.


செய்முறை: அரிசியையும் உளுந்தம் பருப்பையும் தனித்தனியாக நான்கு முதல்


ஐந்து மணி நேரமோ அல்லது முதல் நாள் இரவோ ஊறவைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் மையாக அரைத்து, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, ஒரு விசில் வரும் வரை குக்கரில் வேகவைத்து எடுக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து, வெல்லம் சேர்த்து மையாக அரைத்து, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாகக் கலந்தால் 'பூரணம்' தயார். இந்தப் பூரணத்தை எலுமிச்சை அளவில் எடுத்து, அரைத்துவைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்து, நன்றாகக் காய்ந்த எண்ணெயில் போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமானதும் எடுக்கவும்.


குறிப்பு: கடலைப்பருப்புக்குப் பதிலாக துவரம் பருப்பும் சேர்க்கலாம்.


பொப்பட்லு.


தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு, தண்ணீர் - தேவைக்கு, கடலைப்பருப்பு / துவரம் பருப்பு - முக்கால் கப், வெல்லம் - முக்கால் கப், தேங்காய் - கால் கப்.


செய்முறை: மைதா மாவுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர்


விட்டு கலந்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தை விட மாவை சற்றே மிருதுவாகப் பிசையவும். பின்னர் 3 மணி நேரம் ஊறவைத்து, மாவை மறுபடியும் பிசைந்தால் மேல் மாவு ரெடி! வெறும் வாணலியில் கடலைப்பருப்பை போட்டு, வாசனை வரும் வரை 5 நிமிடம் வதக்கி, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 4 - 5 விசில் வரும் வரை வேகவிடவும். வெந்த பருப்புடன் தேங்காய், பொடித்த வெல்லம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் 'பூரணம்' ரெடி. பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து, வாழை இலையில் வைத்து, வட்டமாகத் தட்டி, நடுவில் சிறிய பூரண உருண்டையை வைத்து மூடி, மறுபடியும் அதை வட்டமாகத் தட்டவும். பின்னர் அதை சூடான தோசைக்கல்லில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் நெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாகும் வரை திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...