முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

வாழையிலை மீன் வறுவல்& கேரமல் பனானா வித் வெனிலா ஐஸ்க்ரீம்& வாழைப்பழம் -கோதுமை போளி&வாழைப்பூ-கோலா

 வாழையிலை மீன் வறுவல்


தேவையானவை: சங்கரா மீன்500 கிராம் (தலை பகுதியை நீக்காமல், நன்றாக சுத்தம் செய்து, கழுவிக்கொள்ளவும்), மிளகாய்த்தூள் - 30 கிராம், மஞ்சள்தூள் - 10 கிராம், உப்பு - தேவைக்கு, இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன், வாழை இலை - 8 (சிறிய துண்டாக வெட்டியது), வாழைநார் - சிறிதளவு, தயிர் - 2 டீஸ்பூன்.


அரைக்க: கொத்துமல்லித்தழை - 40 கிராம், புதினா - 100 கிராம், உரித்த பூண்டு 8 பற்கள், பச்சைமிளகாய் - 2, எலுமிச்சைச்சாறு - 3 டீஸ்பூன், இஞ்சி - சிறிதளவு, உப்பு தேவைக்கு. இவற்றை விழுதாக்கிக்கொள்ளவும்.


செய்முறை: சுத்தம் செய்த மீனின் மீது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது, தயிர், அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிசறவும். பின்னர் அரை மணி நேரம் ஊறவைத்து, வாழை இலையில் சுற்றி, வாழைநாரால் கட்டவும். பின்னர் காய்ந்த தோசைக்கல்லில் போட்டு, சுட்டு எடுத்து, வாழை இலையை நீக்கிப் பரிமாறவும்.


குறிப்பு: வாழை இலையில் மீனை வைத்து சுற்றுவதற்கு முன்பாக, வாழை இலையை சூடு தண்ணீரில் போட்டு உடனே எடுக்கவும். இப்படிச் செய்தால், மடிக்கும்போது வாழை இலை கிழியாமல் இருக்கும்!


கேரமல் பனானா வித் வெனிலா ஐஸ்க்ரீம்


தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று (நீளமாக இரண்டாக நறுக்கவும்), வெனிலா ஐஸ்க்ரீம் (பொடியாக நறுக்கவும்). 100 கிராம், பாதாம் - 2


கேரமல் செய்ய: சர்க்கரை


100 கிராம், தண்ணீர் -3 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு அரை டீஸ்பூன், வெண்ணெய் 4 டீஸ்பூன், மில்க் மெய்டு - 50 கிராம். வாணலியில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கரைந்ததும், வெண்ணெய், எலுமிச்சைச்சாறு, மில்க் மெய்டு சேர்த்து, நன்றாகக் கிளறி இறக்கவும்.


செய்முறை: ஒரு கிண்ணத்தில், நறுக்கிய வாழைப்ழத்தை வைத்து, அதன் மேலே வெனிலா ஐஸ்க்ரீமை வைக்கவும் அதன் மீது கேரமலை ஊற்றி, பாதாமைத் தூவி பரிமாறவும்


வாழைப்பழம் -கோதுமை போளி


தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, கோதுமை மாவு - 500 கிராம், உப்பு தேவைக்கு.


பூரணம் செய்ய: பாசிப்பருப்பு, வெல்லம் - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 50 கிராம்.


செய்முறை: கோதுமை மாவு, உப்பு, வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து, சப்பாத்தி


மாவு பதத்தில் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை நன்றாக வேகவைக்கவும். வெல்லத்தை கரைத்து, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, வெந்த பாசிப்பருப்பு, வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்து, ஊறவைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, வட்டமாகத் திரட்டவும். அதன் நடுவே பூரண உருண்டையை வைத்து, மூடி, நன்றாக வட்டமாகத் திரட்டி, காய்ந்த தோசைக்கல்லில் போட்டு, திருப்பி விட்டு சுட்டு எடுக்கவும்.


வாழைப்பூ-கோலா


தேவையானவை: வாழைப்பூ


100 கிராம் (ஆய்ந்து, பொடியாக நறுக்கவும்), துவரம் பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 75 கிராம், சோம்பு, சீரகம் - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெரிய வெங்காயம், தக்காளி தலா ஒன்று, புளி, கொத்துமல்லித்தழை - சிறிதளவு, பூண்டு - 6 பற்கள், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.


செய்முறை: துவரம் பருப்பு, கடலைப்பருப்பை தனித்தனியாக ஒரு மணி நேரம்


ஊறவைத்து, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து 'அடை'க்கு அரைப்பதைப் போன்று அரைக்கவும். வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, உரித்த பூண்டு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, அரைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். கலவையானது பாதியளவு வெந்ததும், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் கொத்துமல்லித்தழையைத் தூவி இறக்கவும்.


குறிப்பு: செட்டிநாட்டு ஸ்பெஷலான இந்த டிஷ்ஷை, அடுப்பை மிதமான தீயில் வைத்தே செய்ய வேண்டும். சாம்பார் சாதம் / தயிர் சாதம் / சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...