ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
உருளைக்கிழங்கு.கேரட்.பின்ஸ். பட்டாணி. தக்காளி 3 இவையெல்லாம் சேர்த்து ஒருகப். பயத்தம்பருப்பு 1கப ் இவற்றை குக்கரில் போட்டு 4 கப்தண்ணீர்.ஒரு டீஸ்பூன் மஞ்சத்தூள் சேர்த்து மூன்று விசில் வைத்து வேகவைக்கவும்.பிறகு 4ஸ ்பூன் தேங்காய் துருவி மிக்ஸி ஜாரில்போடுங்க.அதனுடன் 2 ஸ்பூன் போட்டுக்கடலை. பட்டைகிராம்பூ.ஏலக்காய். பச்சைமிளகாய் 5 (காரத்திக்கு ஏற்றார்போல்)) இவற்றை மிக்ஸி ஜாரில் நைசாகஅரைத்து.குக்கரில் நாம் வைத்திருக்கும் பருப்புடன் சேர்த்து. தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து மல்லித்தழை. கருவேப்பிலை போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு சூப்பரான கடப்பாரெடி.இட்லி.தோசை.சப்பாத்தி.பூரி. ரவாதோசை.கோதுமை தோசை எல்லா வைகையான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக