பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
பாதாம் 200 கிராம். முந்திரிப் பருப்பு 200 கிராம். பாசிப் பருப்பு 50 கிராம். பொட்டுக்கடலை 50 கிராம். நெய் 150 கிராம். ஏலக்காய் 10 கிராம் பருப்பு வகைகள் அனைத்தையும் லேசாக வறுக்கவும். மிக்ஸி ஜாரில் நைஸாக பொடி செய்துக்கொள்ளவும். அதனுடன சீனி.500 கிராம். ஏலக்காய் 10 கிராம் நைஸாக பொடித்து கலந்து பிறகு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் 4.5 முந்திரிப்பருப்பை சின்ன சின்னதாக நறுக்கி. நெய்யில் வறுத்து இந்த மாவுடன் கலந்து விடவும். சூடாக இருக்கும்போதே உருண்டைகளாக பிடித்து. லட்டுகளாக செய்யவும். பாதாம்.முந்திரி லட்டு ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக