தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு கப், பன்னீர் 100 கிராம், வெங்காய விழுது, தக்காளி விழுது - தலா கால் கப், தயிர் 4 டீஸ்பூன், பச்சைமிளகாய் 1, மஞ்சள்தூள், சீரகத்தூள் தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் தலா அரை டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது, தனியாத்தூள் தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கொதிக்கும் நீரில் நூடுல்ஸை போட்டு பாதியளவு வேகவைத்து நீரை வடிக்கவும். பின் அதை குளிர்ந்த நீரில் அலசி நீரை வடிய விடவும். அகலமான கடாய் ஒன்றில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய பச்சைமிளகாயை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காய விழுது, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி விழுதுஅல்லது தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் பன்னீர் (க்யூப் )சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும். கலவையில் நீர் வற்றி கெட்டியாக வந்ததும் நூடுல்ஸைச் சேர்த்து கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும்.
இலை அடை தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...
கருத்துகள்
கருத்துரையிடுக