கோதுமை ரவையை .ஒரு கப் எடுத்து லேசாக வறுத்து கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைக்கவும். (ரொம்ப நாளாக சொல்லணும்னு தோணுச்சு. இப்ப நான் அதிகம் பயன்படுத்துவது மண் பாத்திரங்கள்தான். குக்கர்.இட்லிபாணை. பிரஷர் பன். டம்ளர் நிறைய பாத்திரங்கள் கிடைக்கிறது. மைக்ரோ ஓவனில் வைத்து சமைக்கிறதுக்கு வசதியா இருக்கு. சுவையும் மாறாமல் இருக்கும். சரி நாம்ம இப்ப சமையலுக்கு வருவோம்.) குக்கரை அடுப்பில் வையுங்கள் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு. கடலைப்பருப்பு. இஞ்சி. காய்ந்த மிளகாய் 10 . வெங்காயம் ஒரு கப் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு கேரட் .உருளைக்கிழங்கு. பட்டாணி சேர்த்து வதக்கி. பிறகு கோதுமை ரவையை அதில் சேர்த்து நன்றாக வதக்குங்கள். ஒருகப் ரவைக்கு இரண்டரை கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து.குக்கர் மூடியை எடுத்து மூடவும். 3 விசில் வைத்து இறக்கவும். பத்து நிமிடம் கழித்து. மூடியைத் திறந்து விட்டு அதில் .கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி விட்டு இருக்குங்க. கோதுமை ரவை உப்புமா ரெடி. தேங்காய் சட்னி .தக்காளி சட்னி வைத்து சாப்பிடலாம்.
இலை அடை தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...
கருத்துகள்
கருத்துரையிடுக