முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

வத்தக்குழம்பு பலவகையான ருசிகளில்

 கத்தரிக்காய் வத்தக்குழம்பு தேவையானவை: கத்தரிக்காய் - 10, பூண்டு - 6 பற்கள் (இடிக்கவும்), வெங்காயம், தக்காளி தலா ஒன்று, உப்பு -தேவையான அளவு, மஞ்சள்பொடி - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி, தனி மிளகாய்ப்பொடி - தலா 2 டீஸ்பூன், புளிக்கரைசல் - அரை கப், வெல்லம் - சிறிய கட்டி, வெந்தயப்பொடி (மேலே தூவ) - ஒரு சிட்டிகை. தாளிக்க: நல்லெண்ணெய் - 50 கிராம் + 10 மில்லி, கடுகு, பெருங்காயம், வெந்தயம் - சிறிதளவு, சோம்பு - கால் டீஸ்பூன். செய்முறை : வாணலியில் 50 கிராம் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை தாளித்து, நறுக்கிய கத்தரிக்காய், இடித்த பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாகப் பிரட்டி, கொதி வரவிடவும். கடைசியாக வெல்லம் சேர்த்து இறக்கவும். பொடித்த சுண்டைக்காய் வத்தக்குழம்பு தேவையானவை காய்ந்த கண்டைக்காய் - 10, புளிக்கரைசல் முக்கால் சுப், உப்பு - தேவையான அளவு, மஞ்சள்பொடி, சாம்பார் பொடி, மிளகாய்ப்பொடி தலா 2 டீஸ்பூன், வெங்காயம் -ஒன்று (நறுக்கவும்). - 50 கிராம் + 10 மில்லி, கடுகு, தாளிக்க: நல்லெண்ணெய் பெருங்காயம்,...

கோதுமை ரவை உப்புமா ரெடி.

  கோதுமை ரவையை .ஒரு கப் எடுத்து லேசாக வறுத்து கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைக்கவும். (ரொம்ப நாளாக  சொல்லணும்னு தோணுச்சு. இப்ப நான் அதிகம் பயன்படுத்துவது மண் பாத்திரங்கள்தான்.  குக்கர்.இட்லிபாணை. பிரஷர் பன். டம்ளர் நிறைய பாத்திரங்கள் கிடைக்கிறது. மைக்ரோ ஓவனில் வைத்து சமைக்கிறதுக்கு வசதியா இருக்கு. சுவையும் மாறாமல் இருக்கும். சரி நாம்ம இப்ப  சமையலுக்கு வருவோம்.) குக்கரை அடுப்பில் வையுங்கள் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு. கடலைப்பருப்பு. இஞ்சி. காய்ந்த மிளகாய்  10 . வெங்காயம் ஒரு கப் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.  பிறகு கேரட் .உருளைக்கிழங்கு. பட்டாணி சேர்த்து வதக்கி. பிறகு கோதுமை ரவையை அதில் சேர்த்து நன்றாக வதக்குங்கள். ஒருகப் ரவைக்கு இரண்டரை கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து.குக்கர் மூடியை எடுத்து  மூடவும். 3 விசில் வைத்து இறக்கவும். பத்து நிமிடம் கழித்து. மூடியைத் திறந்து விட்டு அதில் .கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி விட்டு இருக்குங்க. கோதுமை ரவை உப்புமா ரெடி. தேங்காய் சட்னி .தக்காளி சட்னி வைத்து சாப்பிடலாம்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...