காலிஃப்ளவரை சுத்தம் செப்து எடுத்து வையுங்க. உருளைக்கிழங்கு தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி வையுங்க அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து நாலு ஸ்பூன் எண்ணைய் விடுங்க காய்ததும் பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து. வெங்காயம் 2 தக்காளி 2 முந்திரிபருப்பு இவற்றை மிக்சியில் அரைத்து அதில் கலந்து பின் காலிபிளவர் .உருளைக்கிழங்கு. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத்தூள் . அதில் கலந்து கொஞ்சம் உப்பு தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு .குக்கரில் 2 விசில் வைத்து. 10 நிமிடம் கழித்து. குக்கரின் மூடியைத் திறந்து. உருளைக்கிழங்கு நன்றாக மசித்து விடவும் . பின் எண்ணைய் பிரியும்போது ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதன் மேலே இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூப்பரான கமகம காலிஃப்ளவர் மசாலா ரெடி பிரியாணி.சப்பாத்தி .நாண்.பூரி இது எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம் .
பாரம்பரிய மண் பானை சமையலில் இருந்து Opos எப்படி ஆரோக்கியமானது? இதுபோல நிறைய பேர் கேள்வி கேட்டுட்டு இருக்காங்க ரொம்ப ஈசியா சொல்லனும்னா .நம்ம முன்னாடி எல்லாம் ஒரு பெரிய குக்கரில் .உள்ளே வச்சு எடுக்க .4 அடிக்கு ஒரு கேரியர் மாதிரி பாத்திரம் அதையும் சேர்த்து தான் கொடுப்பாங்க. இப்ப மண்பாண்டங்களில் செய்யக்கூடிய குக்கர் கூட கிடைக்கிறது அதில் எப்படி சமையல் செய்யலாம் தெரியுமா? நம்மளும் தெரிஞ்சுக்கலாம் வாங்க .இப்ப சாம்பார் காய்கறிகளை ரெடி செய்து முதல் அடுக்கில் வைத்துவிட்டு ஒரு ஸ்பூன் சாம்பார்த்தூள் வெங்காயம். பச்சை மிளகாய். துவரம் பருப்பு .உப்பு .புளித் தண்ணீர்.ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு .ஒரு அடுக்கு ரெடி. இரண்டாவது அடுக்கில் பொரியல். உப்பு .காரம் சேர்த்து .அரை டம்ளர் தண்ணீர் விடவும் இரண்டாவது அடுக்கு ரெடி .மூன்றாவது அடிக்கு கூட்டு செய்வதற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி அதில் உப்பு. காரப்பொடி .பருப்பு தேங்காய் பேஸ்ட் .சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்றாவது அடிக்கு ரெடி. நாலாவதுஅடுக்கில் தேவையான காய்கறிகள் உருளைக்கிழங்கு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகள் .அதுல கொஞ்சம் காரம். உப்பு. மிளகாய் தூள் .ஒரு பெரிய வெங்காயம் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு .சிறிதளவு தண்ணீர் சேர்த்து. நான்கு அடுக்குகளையும் ஒன்றாக இணைத்து ரெடி.செய்யவும். பெரிய குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் விடுங்கள் இப்போ நம்ம சரி பண்ணி வச்சிருக்க கேரியர் அடுக்கு அதை எடுத்து. குக்கரில் தூக்கி வையுங்க .இப்ப மூடி மூன்று விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு. பத்து நிமிஷம் கழிச்சு திறந்து பாருங்க.தண்ணீர் சேர்த்து சரி பண்ணிக்கோங்க. ஈசியான சமையல் சீக்கிரம் செய்து முடித்து விடலாம் .இந்த சமையல் என்னன்னா எண்ணெய் அதிகம் தேவையில்லை . 2 ஸ்பூன் எண்ணெய் போட்டு கடுகு. கருவேப்பிலை தாளித்து எல்லாவற்றிலும் சேர்த்திடுங்க
கருத்துகள்
கருத்துரையிடுக