பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
பாரம்பரிய மண் பானை சமையலில் இருந்து Opos எப்படி ஆரோக்கியமானது? இதுபோல நிறைய பேர் கேள்வி கேட்டுட்டு இருக்காங்க ரொம்ப ஈசியா சொல்லனும்னா .நம்ம முன்னாடி எல்லாம் ஒரு பெரிய குக்கரில் .உள்ளே வச்சு எடுக்க .4 அடிக்கு ஒரு கேரியர் மாதிரி பாத்திரம் அதையும் சேர்த்து தான் கொடுப்பாங்க. இப்ப மண்பாண்டங்களில் செய்யக்கூடிய குக்கர் கூட கிடைக்கிறது அதில் எப்படி சமையல் செய்யலாம் தெரியுமா? நம்மளும் தெரிஞ்சுக்கலாம் வாங்க .இப்ப சாம்பார் காய்கறிகளை ரெடி செய்து முதல் அடுக்கில் வைத்துவிட்டு ஒரு ஸ்பூன் சாம்பார்த்தூள் வெங்காயம். பச்சை மிளகாய். துவரம் பருப்பு .உப்பு .புளித் தண்ணீர்.ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு .ஒரு அடுக்கு ரெடி. இரண்டாவது அடுக்கில் பொரியல். உப்பு .காரம் சேர்த்து .அரை டம்ளர் தண்ணீர் விடவும் இரண்டாவது அடுக்கு ரெடி .மூன்றாவது அடிக்கு கூட்டு செய்வதற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி அதில் உப்பு. காரப்பொடி .பருப்பு தேங்காய் பேஸ்ட் .சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்றாவது அடிக்கு ரெடி. நாலாவதுஅடுக்கில் தேவையான காய்கறிகள் உருளைக்கிழங்கு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகள் .அதுல கொஞ்சம் காரம். உப்பு. மிளகாய் தூள் .ஒரு பெரிய வெங்காயம் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு .சிறிதளவு தண்ணீர் சேர்த்து. நான்கு அடுக்குகளையும் ஒன்றாக இணைத்து ரெடி.செய்யவும். பெரிய குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் விடுங்கள் இப்போ நம்ம சரி பண்ணி வச்சிருக்க கேரியர் அடுக்கு அதை எடுத்து. குக்கரில் தூக்கி வையுங்க .இப்ப மூடி மூன்று விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு. பத்து நிமிஷம் கழிச்சு திறந்து பாருங்க.தண்ணீர் சேர்த்து சரி பண்ணிக்கோங்க. ஈசியான சமையல் சீக்கிரம் செய்து முடித்து விடலாம் .இந்த சமையல் என்னன்னா எண்ணெய் அதிகம் தேவையில்லை . 2 ஸ்பூன் எண்ணெய் போட்டு கடுகு. கருவேப்பிலை தாளித்து எல்லாவற்றிலும் சேர்த்திடுங்க
கருத்துகள்
கருத்துரையிடுக