ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
பூதரெகுலு தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - 100 கிராம், அரிசி தாள்கள் -15 (இவை தனியாக கடைகளில் கிடைக்கும்), பாதாம் பருப்பு- 5, முந்திரிப் பருப்பு - 5, எண்ணெய் - 100 மில்லி, நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் -3 செய்முறை: வாணலியில் நெய்யை ஊற்றி உருக்கி, ஆறவைக்கவும். அரிசி தாள்களை ஒவ்வொரு லேயராக அடுக்கவும். முதலில் ஒரு அரிசி தாளை விரித்து அதில் பாரிஸின் தூள் வெல்லத்தை ஒரு டேபிள் ஸ்பூன் போடவும். மேலே ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும்: நறுக்கிய பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதன்மீது அடுத்த அடுக்காக மற்றொரு அரிசி தாளை வைத்து, அதன்மீதும் பாரிஸின் தூள் வெல்லத்தைப் பரப்பி, எல்லா இடத்திலு நெய் ஊற்றி, பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதே போல 4 அரிசி தாள்களை செய்து, அதனை 'ரோல்' செய்யவும். இது ஒரு 'பூதரெகுலு' ஆகும். இதே போல் ஒவ்வொ ரோல்களாக செய்தால், சுவையான 'பூதரெகுலு' ஸ்வீட் தயார்! ஆந்திராவின் அத்ரேயபுரம் கிராமத்தின் அன்புப் பரிசான 'பூதரெகுலு' வேற லெவல் இனிப்பு உணவாகும்! பேப்பர் போன்ற மெல்லிய மேற்புறத்துடன் மணமணக்கும் நெய்யுடன் கலந்து செய்யப்படும் இந்த டிஷ், உங்களுக்...