முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

டிபன் சுண்டல் & தயிர் டிக்கா & தேங்காய் இல்லாத சட்னி

 டிபன் சுண்டல் ஒரு கப் பச்சரிசி. அரை கப் பாசிப்பருப்பு இரண்டையும் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் லேசாக நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும் அடுப்பை பற்ற வைத்து குக்கரை அடுப்பில் வைத்து.. இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் .அதில் கடுகு. உளுத்தம்பருப்பு. பச்சை மிளகாய்.5. வெங்காயம் 2.கடலைப்பருப்பு. இஞ்சி. கருவேப்பிலை. தேவையான அளவு உப்பு.( விருப்பப்பட்டால் காய்கறிகள் கேரட். உருளைக்கிழங்கு .பட்டாணி. உங்கள் விருப்பம் போல சேர்த்துக்கொள்ளலாம்.) சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிக்ஸியில் நாம் வறுத்து வைத்திருந்த பச்சரிசியை இரண்டு ஒன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து. குக்கரில் வதக்கி வைத்திருக்கும் கலவையுடன். ஒரு கப் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் வைத்து. 3 விசில் வைத்து இறக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லித் தழை தூவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுண்டல் ரெடி. விருப்பப்பட்டால் தேங்காய் ஒரு மூடி துருவி. பரிமாறும்போது அதன் மேல் போட்டு. ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். இல்லை என்றால் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஊறுகாய்...

டிபன் சுண்டல் & தயிர் டிக்கா & தேங்காய் இல்லாத சட்னி

 டிபன் சுண்டல்


ஒரு கப் பச்சரிசி. அரை கப் பாசிப்பருப்பு இரண்டையும் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் லேசாக நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும் அடுப்பை பற்ற வைத்து குக்கரை அடுப்பில் வைத்து.. இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் .அதில் கடுகு. உளுத்தம்பருப்பு. பச்சை மிளகாய்.5. வெங்காயம் 2.கடலைப்பருப்பு. இஞ்சி. கருவேப்பிலை. தேவையான அளவு உப்பு.( விருப்பப்பட்டால் காய்கறிகள் கேரட். உருளைக்கிழங்கு .பட்டாணி. உங்கள் விருப்பம் போல சேர்த்துக்கொள்ளலாம்.) சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிக்ஸியில் நாம் வறுத்து வைத்திருந்த பச்சரிசியை இரண்டு ஒன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து. குக்கரில் வதக்கி வைத்திருக்கும் கலவையுடன். ஒரு கப் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் வைத்து. 3 விசில் வைத்து இறக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லித் தழை தூவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுண்டல் ரெடி. விருப்பப்பட்டால் தேங்காய் ஒரு மூடி துருவி. பரிமாறும்போது அதன் மேல் போட்டு. ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். இல்லை என்றால் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஊறுகாய். இவற்றுடன் சாப்பிடலாம்.


 தயிர் டிக்கா


தயிர் ஒரு கப் வெள்ளைத்துணியில் நீர்வடிய முடிந்து வைக்கவும். பொட்டுக்கடலை ஒரு ஸ்பூன். காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். கரம் மசாலா அரை டீஸ்பூன். கான்பிளவர் ஒரு ஸ்பூன் . சர்க்கரை ஒரு டீஸ்பூன். இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக நைசாக தண்ணீர் விடாமல் பவுடராக அரைத்துக் கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கு கால் கிலோ. தோல் உரித்து சுத்தம் செய்து மசித்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் 2. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன். உப்பு.தண்ணீர் சிறிதளவு சேர்த்து இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து. சிறிய உருண்டைகளாக தட்டி. பின்னர் அடுப்பில் தவாவை வைத்து அதில் டிக்கா வைத்து. சுற்றிலும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சுட்டு எடுக்கவும் .ஒரு தட்டில் டிக்கா வைத்து அதன்மேல். தயிரில் இரண்டு ஸ்பூன் குங்குமப்பூ கலந்து. அதன்மேல் வைத்து ஓமம் சிறிது அதன் மேல் தூவி சாப்பிடலாம். தயிர் டிக்கா ரெடி.


தேங்காய் இல்லாத சட்னி


பச்சை மிளகாய் 8. பெரியவெங்காயம் 4. கடலைபருப்பு 4 டேபிள் ஸ்பூன். வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும் .புளி சிறிதளவு. உப்பு தேவைக்கு ஏற்ப இவை அனைத்தையும் நைசாக அரைத்து. ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும் .பிறகு கடுகு கருவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும். தேங்காய் இல்லாத சட்னி ரெடி.

கருத்துகள்

www.kalaireal360.xyz

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...