முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

சப்பாத்தி, சாதத்திற்கு சூப்பர் சைடு டிஷ்! ஹோட்டல் சுவையில் முட்டைக்கோஸ் மசாலா செய்வது எப்படி?

அட்டகாசமான ரெசிபி! முட்டைக்கோஸ் மசாலா பொதுவாகச் சற்றே நீர்விட்டுச் செய்யும் பொரியலாகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் இதில் பொட்டுக்கடலை மற்றும் மசாலாக்களை அரைத்துச் சேர்த்துச் செய்வதால், இது சப்பாத்தி, பூரி மற்றும் புலாவ் வகைகளுக்கு ஒரு அருமையான சைடு டிஷ்ஷாக (Side Dish) இருக்கும். சுவையான மற்றும் வித்தியாசமான முட்டைக்கோஸ் மசாலா. முட்டைக்கோஸில் வழக்கமான பொரியல் செய்து சலித்துவிட்டதா? இதோ உங்களுக்காக ஹோட்டல் ஸ்டைலில் ஒரு முட்டைக்கோஸ் மசாலா. இது சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு மிகச்சிறந்த காம்போ! தேவையான பொருட்கள்: * முட்டைக்கோஸ் - 2 கப் (பொடியாக நறுக்கியது) * வெங்காயம் - 3 * தக்காளி - 3 * பொட்டுக்கடலை - 1 கப் * பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 * பச்சை மிளகாய் - 1 * மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் * மல்லித்தூள் - 1 ஸ்பூன் * சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் * மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் * எண்ணெய் / நெய் - 3 ஸ்பூன் * சீரகம் - 1/2 ஸ்பூன் * உப்பு - தேவையான அளவு செய்முறை விளக்கம்: * வதக்கிக் கொள்ளவும்: வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொன...

ஹோட்டல் ஸ்டைல் மட்டர் பன்னீர் மசாலா & டபுல் பீஸ் மசாலா & தால் சப்பாத்தி

 


மட்டர் பன்னீர் மசாலா


பட்டாணி ஒரு கப் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு. காய்ந்ததும் பட்டை. சீரகம். ஏலக்காய் .கிராம்பு .இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து .அதில் இரண்டு தக்காளி. 2 வெங்காயத்தை நைசாக பொடி செய்து சேர்க்கவும். பிறகு அதில் 1. ஸ்பூன் மிளகாய்தூள். 1 ஸ்பூன் மல்லித் தூள். அரை ஸ்பூன் சீரகம்.கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்.உப்பு சேர்த்து வேகவைத்த பட்டாணி.100 கிராம் பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் 10 முந்திரிப்பருப்பை நைசாக அரைத்து.குக்கரில் உள்ள கிரேவியில் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.எண்ணெய் பிரிந்து வெளியில் வரும்போது இறக்கவும்மட்டர் பன்னீர் மசாலா ரெடி. பாத்திரத்தில் மாற்றி இரண்டு ஸ்பூன் நெய் விடவும்.


டபுல் பீஸ் மசாலா


இஞ்சி 1துண்டு பூண்டு 4.பல் மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் தனியா தூள்1. ஸ்பூன் முந்திரிபருப்பு 10 மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் .அதில் சீரகம். கறிவேப்பிலை .சோம்புத்தூள் அரை ஸ்பூன். கரம் மசாலா கால் டீஸ்பூன் தாளித்து அதில் வெங்காயம் 2. தக்காளி 2 சின்னதாக நறுக்கி அதில் சேர்க்கவும். பிறகு டபுள் பீஸ் தோலுரித்து 100.கிராம் . பட்டாணி ஒரு கப் .தண்ணீர் அரை டம்ளர். உப்பு .அரைத்த விழுது களையும் அதில் சேர்க்கவும் .பிறகு குக்கரை மூடி 2 விசில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து பிறகு குக்கரை திறந்து. இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து பாத்திரத்தில் மாற்றி வைக்கவும் .டபுள் பீஸ் மசாலா ரெடி.


தால் சப்பாத்தி


கடலைப்பருப்பு1 கப் குக்கரில் தண்ணீர் விட்டு. ஒரு விசில் வைக்கவும் .பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் 300 கிராம் சர்க்கரை .ஏலக்காய் பொடி 10 கிராம் சேர்த்து நைசாக அரைக்கவும். பிறகு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும் .1 கப் மைதா 1. கப் கோதுமை மாவு .உப்பு சேர்த்து மாவுவை பிசைந்து வைக்கவும் . 15.நிமிடம் ஊறிய பிறகு சப்பாத்திகளாக செய்து.. நடுவில் பருப்பு சர்க்கரை சேர்த்து அரைத்து அந்த கலவையை இரண்டு ஸ்பூன் வைத்து. அதன் மேல் இன்னொரு சப்பாத்திகயைஅதன் மேல் வைத்து மூடி இரண்டு புறமும் நன்றாக தேய்த்து. தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும். சப்பாத்திகளை அதன்மேல்மூடி இரண்டு பக்கமும் சிவக்க வைத்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு எடுக்கவும். தால் சப்பாத்தி ரெடி

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...