ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
சேப்பங்கிழங்கு ஸ்பைசி குக்கரில் ஒரு கப் தண்ணீர் விட்டு சேப்பங்கிழங்கு உப்பு சேர்த்து ஒரு விரிவிட்யும் பின்னர் தோலை உரித்துக் கொள்ளவும். பின்னர் பியகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் மெல், மஞ்சள்தூள், சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து. சிறிய உருண்டை உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காய்வைத்துசேப்பங்கிழங்கு, உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.