கத்தரிக்காய் வத்தக்குழம்பு தேவையானவை: கத்தரிக்காய் - 10, பூண்டு - 6 பற்கள் (இடிக்கவும்), வெங்காயம், தக்காளி தலா ஒன்று, உப்பு -தேவையான அளவு, மஞ்சள்பொடி - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி, தனி மிளகாய்ப்பொடி - தலா 2 டீஸ்பூன், புளிக்கரைசல் - அரை கப், வெல்லம் - சிறிய கட்டி, வெந்தயப்பொடி (மேலே தூவ) - ஒரு சிட்டிகை. தாளிக்க: நல்லெண்ணெய் - 50 கிராம் + 10 மில்லி, கடுகு, பெருங்காயம், வெந்தயம் - சிறிதளவு, சோம்பு - கால் டீஸ்பூன். செய்முறை : வாணலியில் 50 கிராம் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை தாளித்து, நறுக்கிய கத்தரிக்காய், இடித்த பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாகப் பிரட்டி, கொதி வரவிடவும். கடைசியாக வெல்லம் சேர்த்து இறக்கவும். பொடித்த சுண்டைக்காய் வத்தக்குழம்பு தேவையானவை காய்ந்த கண்டைக்காய் - 10, புளிக்கரைசல் முக்கால் சுப், உப்பு - தேவையான அளவு, மஞ்சள்பொடி, சாம்பார் பொடி, மிளகாய்ப்பொடி தலா 2 டீஸ்பூன், வெங்காயம் -ஒன்று (நறுக்கவும்). - 50 கிராம் + 10 மில்லி, கடுகு, தாளிக்க: நல்லெண்ணெய் பெருங்காயம்,...
ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.