பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
தக்காளி தால்
மைசூர் தால் ஒரு கப். குக்கர்ல நல்லா மலர வேக வைக்கவும் .வாணலியில் எண்ணைய் விட்டு.காய்ந்ததும் கடுகு. சீரகம் .கறிவேப்பிலை. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டீஸ்பூன். பச்சை மிளகாய் 3 போடுங்க மிளகாய்த்தூள்1 டேபிள்ஸ்பூன். தக்காளி 5 கொஞ்சம் பெரிய துண்டுகளாக கட் செய்து வதக்கி பருப்புடன் சேருங்க. இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு. அரை டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வையுங்க. சூப்பரான தக்காளி தால் ரெடி .தோசை. இட்லி. சப்பாத்தி. பூரி எல்லாத்துக்குமே சூப்பரான காம்பினேஷன்.
கருத்துகள்
கருத்துரையிடுக