மைதா மாவு ஒரு கப். நாலு ஸ்பூன் ரவா பவுடர். அரை டீஸ்பூன் ஈஸ்ட் 100 கிராம் தண்ணீரில் ஊற வையுங்க. கரைந்ததும். அந்த ஈஸ்ட் எடுத்து மைதா மாவுடன் சேர்த்து. உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து .மைதா மாவை பரோட்டா போடும் பதத்திற்கு பிசைந்து. 5 நிமிஷம் ஊற வையுங்க. பிறகு ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக மாவை எடுத்து பரோட்டா செய்து வையுங்க .லேயர் லேயராக வரலைன்னா நீங்க கவலைப்பட வேண்டாம். ஓரளவுக்கு சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை .அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் விடுங்க நம்ம செய்து வைத்திருக்க பரோட்டாவை. அந்த எண்ணெய் காய்ந்ததும் அதில் பரோட்டாவை போட்டு அடிக்கி வச்சிருங்க. ஒரு வாணலியில் 5 ஸ்பூன் எண்ணைய் விடுங்க அதுல சோம்பு பட்டை 1 குடை மிளகாயை கீரி போடுங்க.மூன்று பெரிய வெங்காயத்தை நைசாக நறுக்கிப் போடுங்கள் 2 ஸ்பூன் சில்லி சாஸ் .2 ஸ்பூன் டொமேட்டோ சாஸ். அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள். கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் .சிறிதளவு உப்பு சேர்த்து நல்லா வதக்குங்க. பிறகு பரோட்டாவை எடுத்து கையால் உடைச்சு மசாலாவுடன் கலந்து 10 நிமிடம் மூடி வையுங்கள்.பத்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கமகம .சில்லி பரோட்டா ரெடி. ஒரு பிளேட் எடுத்து வச்சு. அது மேலே வெங்காயம். எலுமிச்சம் பழம் சேர்த்து பரிமாறவும்.
இலை அடை தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...
கருத்துகள்
கருத்துரையிடுக