முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

பாதாம் பதிர் பூரி&பர்க்கர் வாடி&கரேலா முறுக்கு&ரிப்பன் பகோடா

 பாதாம் பதிர் பூரி


தேவையான பொருட்கள்: மைதா


ஒரு கப், பாதாம் பருப்பு-100 கிராம், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு, சர்க்கரை-2 கப், தண்ணீர்-ஒரு கப்.


செய்முறை: பாதாம் பருப்பை முதல் நாளே ஊற வைத்து தோலுரித்து விழுதாக அரைத்துக் கொண்டு, மைதா, உப்பு சேர்த்து பூரிமாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.


பதிர் தயாரிக்க தேவையான பொருட்கள்: மைதா - ஒருகப், நெய்-ஒரு கப், அரிசிமாவு-ஒரு மேஜைக்கரண்டி.


செய்முறை: மேற்கண்டவைகளைக் கலந்து நுரைக்க அடித்து வைத்துக்


கொள்ளவும்.


பாதாம் பதிர்பூரி செய்முறை: பூரிமாவு பதத்திற்குப் பிசைந்து வைத்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி குட்டி குட்டி வட்டங்களாகத் தேய்க்கவும். தேய்த்த வட்டங்களுக்கு மேல் பதிரைத் தடவவும். இப்படியே - தடவுவது போல் தடவி நான்கு அடுக்குகள் வைக்கவும். மொத்தமாக சுருட்டவும். சுருட்டிய வட்டங்களை கத்தியால் வெட்டி, கடாயில் எண்ணெய் வைத்து பொரித்து எடுக்கவும். சர்க்கரைப்பாகு கம்பிப்பதம் காய்ச்சி, பொரித்தவைகளை பாகில்போட்டு எடுத்து வைக்கவும்.


பக்குவம்


பதிர் தயாரிக்க தளர வரவில்லை என்றால் நெய் இன்னும்கூட கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.


 பர்க்கர் வாடி

தேவையானபொருட்கள்:


கடலைமாவு-4 கப், சோளமாவு-2 கப், மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன், கறுப்பு எள்-ஒரு டீஸ்பூன், வெள்ளை எள்- ஒரு டீஸ்பூன், துருவிய கொப்பரைத் தேங்காய் 1/4கப், கசகசா-1/4கப், நெய்-ஒரு


மேஜைக்கரண்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை-ஒரு கப், மிளகாய்ப்பொடி, கரம்மசாலாப் பொடி, மராட்டி மசாலாப்பொடி தலா 2 டீஸ்பூன், சர்க்கரை, ஆம்சூர்பொடி-தலா ஒரு டீஸ்பூன், புளி தண்ணீர் குட்டி எலுமிச்சை அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை: கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், கறுப்பு எள் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பூரிமாவு போல் பிசைந்து கொள்ளவும். துருவிய கொப்பரைத் தேங்காய், கசகசா இரண்டையும் நெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவும். பின் கொப்பரைத் தேங்காய், கசகசாவோடு மேற்கண்ட பொடிகள், கொத்தமல்லித்தழை கலந்து பூரணமாக வைத்துக்கொள்ளவும். பிசைந்த மாவை சப்பாத்திக் கட்டையில் சிறு சிறு வட்டங்களாகத் தேய்த்து வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒவ்வொரு வட்டத்திலும் புளித்தண்ணீர் தடவி, பூரணத்தைப் பரத்தி சுருட்டவும். சுருட்டியதை இரண்டு, மூன்றாகக் கட் செய்யவும். கட் செய்த ரோல்களை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.


பக்குவம்


புளித்தண்ணீர், புளிக்காய்ச்சலுக்கு கரைப்பதைவிட திக்காக இருக்கவேண்டும் இல்லையெனில் மாவு ஊறிவிடும்.


கரேலா முறுக்கு

கரேலா முறுக்கு தேவையான பொருட்கள்: மைத-/2கிலோ, சூடாக்கிய வனஸ்பதி-50 கிராம், ஓமம் - 2 டீஸ்பூன், சமையல் சோடா-ஒரு சிட்டிகை, எள் 3 டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு


செய்முறை: மைதாமாவோடு உப்பு, ஓமம், சமையல் சோடா கலந்து, வனஸ்பதியை விட்டுப் பிசைந்து கொள்ளவும். சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய வட்டங்களாக இட்டுக் கொள்ளவும். அதை ஒன்றரை இன்ச் நீளத் துண்டுகளாக வெட்டவும். ஒவ்வொரு துண்டின் நடுவிலும் கத்தியால் பலமுறை கீறிவிடவும். பிறகு அந்த துண்டுகளின் இரண்டு முனைகளையும் பிடித்து நடுவில் சுழற்றியது போல் மடித்தால், பாகற்காய் வடிவம் வரும். மேலே எள்ளைத் தூவி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


எள்ளைத் தூவி அமுக்கிவிட்டால் பாகற்காய் போல் செதிலான தோற்றம் கிடைக்கும்.


ரிப்பன் பகோடா

தேவையான பொருட்கள் பச்னீசினவு100 கிராம், கடலைமாவு 200 கிராம், வெண்ணெய் 50 கிராம், பெருங்காயம் ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூன் ஒரு உன்பூன், மஞ்சள்தூள்ஸ்பூன் கரஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு உப்புதேவையான அளவு


வால்முரை அரிசிமாவை வேசாக வாணலியில் வதக்கிக் கொள்ளவும் பின் இதோடு எண்ணெய் தவிர மேற்கண்ட அனைத்தையும் சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும், முறுக்குக் குழாயில் ரிப்பன் பகோடா அச்சைப் போட்டு நின நீளமாகப் பிழிந்து விடவும்.

பக்குவம்


அரிசி மாவை பச்சை வாசனை போக வதக்கினால் போதும் அதிகநேரம் வதக்கினால், மாவு வறுபட்டு சிப்பன் பகோடா உதிரிபகோடாவாகும்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...