முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

கொள்ளு உருண்டைக் குழம்பு & கறுப்பு உளுந்து சாதம்& ஆறு வற்றல குழம்பு

 கொள்ளு உருண்டைக் குழம்பு


தேவையானவை: கொள்ளு - 200 கிராம், காய்ந்தமிளகாய் - 8, வெங்காயம் - 2, பூண்டு - 6 பல், துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து - தலா ஒரு கரண்டி, புளி - எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம், சாம்பார் பொடி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: துவரம்பருப்பு, உளுந்து, கொள்ளு மூன்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து களைந்து உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து ஆட்டுக்கல்லில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, வெங்காயத்தை வதக்கவும். பின்னர் அரைத்த பருப்புக் கலவையை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி, ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக பிடித்து, இட்லித்தட்டில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, புளியை கரைத்து ஊற்றவும். பின்னர் சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இப்போது, வேக வைத்த கொள்ளு உருண்டைகளை போட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும். விரும்பினால் இந்தக் குழம்பில் சிறிதளவு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்க்கலாம். தென்மாவட்டங்களில் கருவாடு சேர்த்து இந்தக் குழம்பு செய்வார்கள்.


கறுப்பு உளுந்து சாதம்


தேவையானவை; புழுங்கல் அரிசி - ஒரு கப், பூண்டு - 5 பல், முழு சுறுப்பு உளுந்து - முக்கால் கப், நெய் - 2 டீஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த சீரகம், மினகு - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - அரை மூடி, தேங்காய்த்துருவல் - அரை கப், கிராம்பு - 4, இஞ்சித்துருவல், வெந்தயம் - தலா ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: புழுங்கல் அரிசியையும் உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு வெந்தயம், பூண்டு, இஞ்சி, சீரக - மிளகுப் பொடி, கிராம்பு, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் ஊறவைத்த அரிசி உளுந்தைச் சேர்த்து இரண்டரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். அரை மணி நேரம் கழித்து குக்கரை திறந்து, எலுமிச்சைச்சாறு கலந்து, துவையல் (அ) குருமாவுடன் பரிமாறவும். வயதுக்கு வந்தப் பெண்களின் உடலை உறுதியாக்கும் உணவு இது!


 ஆறு வற்றல குழம்பு


- தேவையானவை: சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல் - தலா 4 ஸ்பூன், மாங்காய் வற்றல் - 10, கொத்தவரங்காய் வற்றல் - 2 கைப்பிடி, கத்தரிக்காய் வற்றல் - ஒரு கைப்பிடி, பாகற்காய் வற்றல் - 3 ஸ்பூன், தாளிப்பு வடகம் - 5 ஸ்பூன், கடுகு, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன், சாம்பார் பொடி - ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் - 150 கிராம், உப்பு, புளி - தேவையான அளவு.


செய்முறை: புளியை ஊற வைத்து கரைக்கவும். கொதிக்கும் வெந்நீரில் மாங்காய் வற்றல், கொத்தவரங்காய் வற்றல், கத்தரிக்காய் வற்றல், பாகற்காய் வற்றல் இவற்றை ஊற வைக்கவும். கல்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றலை போட்டு நிறம் மாறும் வரை பொரிக்கவும். அதனுடன் தாளிப்பு வடகத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் கடுகை போட்டு பொரித்து, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாம்பார் பொடியை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் ஊற்றி கொதிக்க விடவும். வெந்நீரில் ஊறவைத்துள்ள வற்றல் வகைகளை நன்றாக வடிகட்டி, கொதிக்கும் குழம்பில் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு லேசாக கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...