முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

பாதாம் ஷோர்பா & இளநீர்’ ரசம் & வேப்பம்பூ லெமன் ரசம் & தூதுவளை ரசம்

    பாதாம் ஷோர்பா

தேவையானவை: பாதாம் - 1 கைப்பிடி, பால், தண்ணீர் ஒன்றரை கப், வெண்ணெய் - 1 டீஸ்பூன், ஆல் பனிப்பல் அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், சர்க்கரை, கரம் மச - தலா 1 சிட்டிகை, வெள்ளை மிளகுத்தூள் கால் 


செய்முறை: பாதாமை வெந்நீரில் ஒருமணி நேரம் ஊறவைத்துத் தோலை உரிக்கவும். தோல் நீக்கிய பாதாமுடன் அரை கப் பால சேர்த்து நன்றாக அரைக்கவும். ஒரு பானில் வெண்ணெய் உருகவைத்து, ஆல் பர்ப்பஸ் மாவை சேர்த்து வாசனை வரும்படி நிலம் மாறாதவாறு நன்றாக வறுத்து, பாலைச் சேர்த்துக் கரைத்துக் கொதிக்கவிடவும். பின்ன அரைத்த பாதாமைச் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் உப்பு, வெள்ளை மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். வெதுவெதுப்பான சூட்டில் பரிமாறவும்.


இளநீர்’ ரசம்


தேவையானவை: இளநீர் துவரம்பருப்பு 2, வேகவைத்த 1 டேபிள் ஸ்பூன், தக்காளி, வரமிளகாய் - தலா 1, மிளகு, சீரகம், உப்பு - தலா 2 களை, டீஸ்பூன், கடுகு, வெந்தயம் தலா 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1 சிட்டிகை, புளி எண்ணெய் / நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 இணுக்கு. செய்முறை: புளி, உப்பை 1/2 கப் தண்ணீரில் கரைத்து, நறுக்கிய தக்காளி, இளநீர் வழுக்கையைச் சேர்த்து பிசைந்து வைக்கவும். பின்னர் அதனுடன் வரமிளகாய், மிளகு, சீரகத்தைப் பொடித்துச் சேர்க்கவும், வேகவைத்த துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றவும். எண்ணெய் / நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, கரைத்துவைத்த கலவையை ஊற்றவும். அது சூடேறி வரும்போது இளநீரை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 


 வேப்பம்பூ லெமன் ரசம்


தேவையானவை: வேப்டம்பூ - 1 கைப்பிடி, எலுமிச்சை, வரமிளகாய் - தலா 1, நெய், மிளகு-சீரகத்தூள், மஞ் சள்தூள், நறுக்கிய கொத்துமல்லித்தழை, கடுகு - தலா 1 டீஸ்பூன், பருப்புக் கடைந்த தண்ணீர் 2 கப், வெந்தயம், சீரகம், உப்பு - தலா 1/2 டீஸ்பூன், = கறிவேப்பிலை 


செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய்யைக் காயவைத்து கடுகைப் போடவும். அது வெடித்ததும் வெந்தயம், சீரகம் போட்டு பொரிந்ததும், இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பின்னர் வேப்பம்பூவைப் புரட்டி வறுத்து, பருப்புக் கடைந்தத் தண்ணீரை ஊற்றவும். அதில் மிளகு-சீரகத்தூள், மஞ் சள்தூள், உப்பைச் சேர்க்கவும். நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சையை சாறு பிழிந்து விடவும். பின்னர் கொத்துமல்லித்தழையைப் போட்டு மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து பரிமாறவும். பித்தம் போக்கும் ரசம் இது !


 தூதுவளை ரசம்


தேவையானவை: தூதுவளை 1 கட்டு, வேகவைத்த துவரம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், புளி - நெல்லிக்காயளவு, மிளகு, உப்பு - தலா 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 2, சீரகம், கடுகு, எண்ணெய் தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, மல்லித்தூள், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், பூண்டு பற்கள் - 2. மல்லித்தாள், தூதுவளை ரசம்


செய்முறை: தூதுவளையை ஆய்ந்து முள்ளை நீக்கிக் கழுவி வைக்கவும். சிறிய உரலில் வரமிளகாய், மிளகு, சீரகத்தைப் பொடித்து, பூண்டு, தூதுவளையை ஒன்றிரண்டாக நைத்து வைக்கவும், புளியை ஊறவைத்து, 2 கப் சாறெடுத்து உப்பு சேர்த்து வைக்கவும். பருப்பைக் கடைந்து புளித்தண்ணீரில் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். கடாயில் எண்ணெய்யைக் காயவைத்து, கடுகைப் போட்டு வெடிக்கவிடவும். பின்னர் சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூளைப் போடவும். பின்னர் நைத்த விழுதைச் சேர்த்து அரை நிமிடம் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றவும். நுரைத்துப் பொங்கி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...