முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

கத்தரிக்காய் தேங்காய் பால் குழம்பு & பைனாப்பிள் ரசம் & பச்சை மோர்க்குழம்பு & தஞ்சாவூர் தவலை வடை

 கத்தரிக்காய் தேங்காய் பால் குழம்பு


 தேவையானவை: சிறிய கத்தரிக்காய் - 10, பூண்டு - 10, பச்சைமிளகாய் - 6,


கெட்டி தேங்காய்ப் பால் - 2 கப், உப்பு - சுவைக்கேற்ப, கொத்துமல்லித்தழை - 1 கப், முந்திரி - 10, நெய் - 4 ஸ்பூன். செய்முறை: பூண்டு, 4 பச்சைமிளகாய், கொத்துமல்லி, முந்திரி, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.


கத்தரிக்காயை நான்காக பிளக்கவும். உள்ளே உப்பு தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும். பின், அரைத்த விழுதை கத்தரிக்காய் உள்ளே ஸ்டஃப் செய்யவும். கடாயில் நெய் சேர்த்து, ஸ்டஃப் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சேர்த்து, லேசாக வதக்கி, 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். தேங்காய்ப்பால் சேர்க்கவும். 2 பச்சை மிளகாய்களை கிள்ளி சேர்க்கவும். தேங்காய்ப்பாலுக்குத் தேவையான உப்பு சேர்க்கவும். சேர்ந்து கொதிக்கும்போது அடுப்பை அணைக்கவும். மேலாக கொத்துமல்லித்தழை சேர்க்கவும்.


விழுப்புரம் பக்கங்களில், 'முள் கத்தரிக்காய்' என்று கிடைக்கும். அதில் செய்யப்படும் இந்தக் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். ஒரு மாறுதலுக்கு, சப்பாத்தியுடன் சாப்பிட்டுப் பாருங்களேன்!


பைனாப்பிள் ரசம்


தேவையானவை: பாசிப்பருப்பு - 1/4 கப், மஞ் சள்தூள் - 4 ஸ்பூன், பச்சை மிளகாய் - 8, இஞ்சி - சிறிய துண்டு, பெங்களூர் தக்காளி - 1, பைனாப்பிள் துண்டங்கள் - 1 கப் (பொடியாக அரிந்தது), கொத்துமல்லி - சிறிதளவு, ஆரஞ்சு சாறு /4 கப், உப்பு - சுவைக்கேற்ப, நெய் - 2 ஸ்பூன்.


செய்முறை: பாசிப்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும். இத்துடன் 3 கப் தண்ணீர் சேர்த்து, நீர்க்க கரைக்கவும். உப்பு சேர்க்கவும். பெங்களூர் தக்காளியை வேக வைத்து, தோல் எடுத்து, மிக்ஸியில் அரைக்கவும். பாத்திரத்தில் நெய் ஊற்றி, நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், பைனாப்பிள் துண்டங்கள் சேர்த்து வதக்கவும். வெந்த பாசிப்பருப்பு சேர்க்கவும். அரைத்த தக்காளி, உப்பு சேர்க்கவும். பொங்கி 600 வரும்போது அடுப்பை அணைக்கவும். ஆரஞ்சு சாறு, கொத்துமல்லி சேர்க்கவும்.


பச்சை மோர்க்குழம்பு


தேவையானவை கெட்டியான மோர் (புனித்தது) - 2 கப், தனியா - 2 ஸ்பூன், வெந்தயம், கடலைப்பருப்பு % ஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, உப்பு - சூசிக்கேற்ப தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன், பச்சை மிளகாய் 2, தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.


(செய்முறை: வெறும் கடாயில் தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம் சேர்த்து வறுக்கவும், இத்துடன், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து. தேவையான தண்ணீர் சேர்த்து, வழுவழுவென அரைக்கவும், கெட்டியான மோர், உப்பு, அரைத்த விழுது சேர்த்து கலக்கவும். தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து மூடி வைக்கவும்..


தஞ்சாவூர் தவலை வடை


தேடையால்வை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி தல கால் கப், பாசிப்பருப்பு - 2 ஸ்பூன், மிளகாய் வற்றல் - 8. கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, பொடியாக அரிந்த தேங்காய்த் துண்டுகள் - 1 5ப், கடுகு - 1 ஸ்பூன், கொத்துமல்லித்தழை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஸ்பூன். செய்முறை பாசிப்பருப்பை தனியாக ஊற வைக்கவும். மீதமுள்ள பருப்புகளை ஒன்றாக ஊற வைக்கவும். நீரை வடித்து, உப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் சோத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில், ஊறவைத்த பாசிப்பருப்பை, நீரில்லாமல் பிழிந்து போடவும். தேங்காய்த் துண்டுகள், கொத்துமல்லித் தழை சேர்க்கவும். 1 ஸ்பூன் உண்ணெயில் கடுகு தாளித்து மாவுடன் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக கலக்கவும். ' எண்ணெயை மிதமான சூட்டில் வைக்கவும், மாவை, ஒரு குழிக்கரண்டியில் எடுத்து,.


எண்ணெயில் போட்டு, மொறுமொறுவென பொரித்தெடுக்கவும்." இது வெளியில் கரகரப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...