முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

மொறுமொறுப்பான சுவையான மைசூர் பருப்பு ரெசிபி செய்வது எப்படி?

பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...

பனீர்  வெஜ் சாலட்  & பனீர் மசாலா பப்பட் & பனீர் ஸ்டிக்ஸ் & பிரட் பனீர் ரோல் 

 பனீர் வெஜ் சாலட்


பனீர்  வெஜ் சாலட் 

தேவையானவை: துருவிய பனீர், கேரட், பொடியாக நறுக்கிய


வெள்ளரிக்காய், வெங்காயம் - தலா 1/4 கப், பச்சை மிளகாய் -2 (இரண்டாக கீறிக்கொள்ளவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - 1.5 டீஸ்பூன், மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.


செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள


பொருள்கள் எல்லாவற்றையும் அகலமான பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்து பரிமாறவும்

. பனீர் மசாலா பப்பட்

தேவையானவை: மிளகு அப்பளம் - 2, துருவிய பனீர், துருவிய கேரட்,

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் குடைமிளகாய் - தலா 1 கப் மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன், மாங்காய்த்தூள், சாட் மசாலாத்தூள் தலா 1/4 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.

செய்முறை: அடுப்பில் தோசைக்கல்லை நன்றாக சூடுபடுத்தி,

மிளகு அப்பளத்தை போட்டு, இரண்டு பக்கமும் திருப்பிவிட்டு சுட்டு எடுக்கவும். மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சுட்ட மிளகு அப்பளம் மீது பரப்பி வைத்து, ஏதாவதொரு சூப்புடன் பரிமாறவும்.


பனீர் ஸ்டிக்ஸ்


தேவையானவை: நீளமாக மெலிதாக நறுக்கிய பனீர் - 100 கிராம், மைதா 1/2 டேபிள் ஸ்பூன், கார்ன் ஃப்ளோர் - 1 டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மாங்காய்த்தூள், சாட் மசாலாத்தூள், இட்டாலியன் சீஸனிங் - தலா 3/4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை : மேற்காணும் எல்லா பொருள்களையும் பனீர்துண்டுகளுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசறி

வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் பனீர் துண்டுகளைபோடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். 

பிரட் பனீர் ரோல் 

தேவையானவை: ஓரம் நீக்கிய பிரெட் துண்டுகள் - 4, துருவிய பனீர் 1/2 கப், காஷ்மீரி மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு - தலா 1/2 டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், தக்காளி சாஸ் - சிறிதளவு, உப்பு - தேவைக்கு.


செய்முறை: பிரெட் துண்டுகளை சப்பாத்தி கட்டையில் வைத்து, மெலிதாக தேய்த்துக்கொள்ளவும். துருவிய பனீர், காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு, தக்காளி சாஸ், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளவும். தேய்த்த பிரெட்டில், பனீர் கலவையை வைத்து சுருட்டவும். ஓரத்தில் தண்ணீர் தொட்டு ஒட்டிவிடவும். தோசைக்கல்லில் நெய் ஊற்றி, தயார் செய்து வைத்துள்ள பனீர் - பிரெட் ரோலை போட்டு, எல்லாப் பக்கமும் பொன்னிறமாகும் வரை திருப்பிவிட்டு, டோஸ்ட் செய்து எடுக்கவும். தக்காளி சாஸ் மற்றும் புதினா சட்னியுடன் பரிமாறவும்.



கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...