முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

சீமை இலந்தை சூப்&நிலக்கடலை சூப்&தேங்காய் மிளகு சூப்&பீட்ரூட் பேசில் சூப்

 சீமை இலந்தை சூப்


தேவை : சீமை இலந்தைப்பழம் (காய் வெட்டாக எடுத்துக்கொள்ளவும்) 10, ஆப்பிள் 13 பழம் இஞ்சி - 1 சிறிய துண்டு, வெண்ணெய் - 1 டீஸ்பூன், பால் -கப், உப்பு -தேவையான அளவு மிளகுத்தாள் - தேவையான அளவு.


செய்முறை: சீமை இலந்தைப்பழத்தை நன்கு தண்ணீரில் வேகவைத்து, விதை, தோல்நீக்கி வைக்கவும்.


கடாயில் வெண்ணெயை சூடாக்கி, அதில், தோல் நீக்கி நறுக்கிய ஆப்பிள், இஞ்சி சேர்த்து சற்று வதக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து, சற்று வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து, வேகவைத்த சீமை இலந்தைப்பழத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும், பரிமாறும்போது பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும். மேலே பிரெஷ்கிரீம் அல்லது வறுத்த பிரெட் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.


பி.கு: சீமை இலந்தைப்பழத்தை பலர் விரும்புவது இல்லை. ஆனால் இரும்புச்சத்தும் கால்சியமும் கொண்ட இப் பழத்தை சூப் செய்து உண்ணலாம்.


நிலக்கடலை சூப்


தேவை:பச்சை வேர்க்கடலை (வேகவைத்தது) - 1/2 கப், பெங்களூர் தக்காளி - 2, பூண்டு 6 பல், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் 1, சீரகம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. மிளகுத்தூள் - தேவையான அளவு.


செய்முறை: கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், 2 பல் பூண்டு, சீரகம், நறுக்கிய தக்காளி, வேகவைத்த வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தண்ணீர், உப்பு சேர்த்து, மூடிவைத்து பத்து நிமிடம் வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும்.


கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். அத்துடன் அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு சூடாக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்தும் பரிமாறலாம்.


தேங்காய் மிளகு சூப்


தேவை: தேங்காய்ப்பால் 2 கப், காரட், பீன்ஸ், கோஸ், காலிஃபிளவர் (நீளமான துண்டுகளாக நறுக்கவும்) - கப், இஞ்சி - 1 சிறிய துண்டு (நீளமான துண்டுகளாக நறுக்கவும்). பூண்டு - 2 பல்(பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், மிளகு - ½ ஸ்பூன், வெங்காயம் - 1, உப்பு - தேவையான அளவு. மிளகுத்தூள் - தேவையான அளவு.


செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் காய்கறிகள், இஞ்சி சேர்த்து, தண்ணீர், உப்பு சேர்த்து, மூடிவைத்து பத்து நிமிடம் வேகவிடவும். காய்கறிகள் வெந்ததும் தேங்காய்ப்பால், மிளகுத்தூள் சேர்த்து பொங்கியதும் சூடாக பரிமாறவும்.


பி.கு: இருமலுக்கு இதமான சூப். வயிற்றுப்புண் இருப்பவர்கள் மிளகாய் குறைத்துக்கொள்ளலாம்.


பீட்ரூட் பேசில் சூப்


தேவை: பீட்ரூட் துருவல் - 1 கப், தக்காளி - 2, துளசி இலை - கப், இஞ்சி - 1 சிறிய துண்டு, வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1, சீரகம் ஸ்பூன், உப்பு தேவையான அளவு. மிளகுத்தூள் - தேவையான அளவு.


செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, சீரகம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் சுத்தம் செய்த துளசி இலை சேர்த்து, அத்துடன் தண்ணீர், சேர்த்து வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும். பரிமாறும்போது தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும்.


பி. கு: சளி, காய்ச்சல் போன்ற அசௌகரியம் ஏற்படும்போது இந்த சூப் இதம் தரும். சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.


# என்னிடம் அதிகமான நண்பர்கள் சூப் வகைகள் கேட்டுக்கொண்டதால்எழிதியுள்ளேன்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...