முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

மொறுமொறுப்பான சுவையான மைசூர் பருப்பு ரெசிபி செய்வது எப்படி?

பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...

கோதுமை போண்டா& மெலன் சீட் சப்ஜி&ஆளி விதை கேக்

 கோதுமை போண்டா


தேவையானவை : கோதுமை மாவு


2 கப், அரை டீஸ்பூன், 20 உளுந்து மாவு - அரை கப், உப்பு தேங்காய்த்துருவல் - 1 கப், சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கவும்), பச்சைமிளகாய் - 2, 4, உளுந்து தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.


செய்முறை: கோதுமை மாவுடன் உளுந்து மாவைச் சேர்த்து நன்றாக


கலக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துத் தளரப் பிசையவும். 2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, ஆறியதும், மாவில் கொட்டிப் பிசையவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, மாவை எலுமிச்சை அளவில் உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.


மெலன் சீட் சப்ஜி


தேவையானவை: கிருணிப்பழ விதைகள் - 1/2 கப், பனீர் துண்டுகள் - 1 கப், தக்காளி, வெங்காயம் - தலா 2, பூண்டு 4 பற்கள், கரம் மசாலா, தனியாத்தூள் - 2 ஸ்பூன், வெண்ணெய் - 3 ஸ்பூன், மிளகாய் வற்றல் - 5, கசூரி மேத்தி - 1 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க.


செய்முறை : கிருணிப்பழ விதைகளை ஊறவைத்து, அரைக்கவும். 2 ஸ்பூன் வெண்ணெயை கடாயில் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி, மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன், அரைத்த கிருணி விதை விழுது, பனீர் துண்டுகள், உப்பு, தனியாத்தூள், கரம் மசாலா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கசூரி மேத்தியை கைகளால் கசக்கித் தூவவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து, பரிமாறவும்.


குறிப்பு: மெலன் விதையில், வைட்டமின் 'ஏ', இரும்புச்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன!


ஆளி விதை கேக்


தேவையானவை: ஆளி விதை,

கோதுமை மாவு, பாதாம், நாட்டுச் சர்க்கரை, பால் - தலா 1 கப், வெண்ணெய் - 1/4 கப், கோகோ பவுடர் - 3 ஸ்பூன், வெண்ணிலா எசன்ஸ், சோடா - தலா 1/2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன், உப்பு - சிட்டிகை.



செய்முறை: ஆளி விதை, பாதாம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தனித்தனியாக மிக்ஸியில் பொடித்து, சலிக்கவும். கோதுமை மாவு, உப்பு, கோகோ பவுடர், ஆப்ப சோடா உள்ளிட்டவற்றை சேர்த்து, சலிக்கவும். இதை, சலித்த பாதாம் கலவையுடன் சேர்க்கவும்.இக்கலவையுடன், உருக்கிய வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ், பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெண்ணெய்த் தடவியப் பாத்திரத்தில் இவற்றை ஊற்றி, மைக்ரோவேவ் அவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வேகவைத்து எடுக்கவும்.


குறிப்பு: 'மைக்ரோவேவ் அவன்' இல்லாவிட்டால், குக்கரில் வேகவைக்கலாம். பக்கவாதம் உள்ளவர்கள், ஆளி விதையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...