முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

பம்கின் சீட் - ஸ்பினாச் சூப்&சாரைப்பருப்பு பச்சடி&நியூட்ரி மிக்ஸ் பவுடர்&சாரைப்பருப்பு அல்வா&வெள்ளரி விதை சப்பாத்தி&வெள்ளரி விதை பாயசம்

 பம்கின் சீட் - ஸ்பினாச் சூப்


தேவையானவை:

பறங்கி விதை - 1/4 கப், பசலைக்கீரை 1 கட்டு, பால் - 2 கப், வெங்காயம் - 1, பூண்டு - 4 பற்கள், வெண்ணெய் - 4 ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - சுவைக்கேற்ப.


செய்முறை: பறங்கி விதையை ஊறவைத்து, பால் சேர்த்து, கரகரப்பாக


அரைக்கவும். 2 ஸ்பூன் வெண்ணெயை கடாயில் சேர்த்து, பசலைக்கீரை, வெங்காயம், உரித்த பூண்டு சேர்த்து வதக்கி, பால் சேர்த்து அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில், அரைத்த பறங்கி விதை, அரைத்த கீரை, மீதமுள்ள பால், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும். மீதமுள்ள வெண்ணெயை மேலாகச் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.


குறிப்பு: இதனுடன் பிரெட் துண்டுகள் வைத்து, இரவு உணவாகப் பரிமாறலாம்!


சாரைப்பருப்பு பச்சடி


தேவையானவை: சாரைப்பருப்பு 1/4 கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1/4 ஸ்பூன், முள்ளங்கி - 1, புளிக்காத கெட்டித்தயிர் - 1 கப், சர்க்கரை - 2 சிட்டிகை, உப்பு - தேவைக்கு, கொத்தமல்லித்தழை

அலங்கரிக்க.


செய்முறை: தண்ணீர் சேர்க்காமல் தயிரைக் கடைந்து, தேவையான அளவு உப்பு, 2 சிட்டிகை சர்க்கரை சேர்த்து, கலந்துவைக்கவும். சாரைப்பருப்பை ஊறவைத்து, விழுதாக அரைத்து, தயிருடன் சேர்க்கவும். பின்னர் முள்ளங்கியைத் துருவி சேர்க்கவும், இறுதியாக, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்துப் பரிமாறவும்


நியூட்ரி மிக்ஸ் பவுடர்


தேவையானவை:

பறங்கி விதை, வெள்ளரி விதை, கிருணிப்பழ விதை, சூரியகாந்தி விதை, ஆளி விதை,மக்னா விதை, எள், கசகசா தலா 1/4 கப்.


செய்முறை: மேற்காணும் பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு வறுத்து, ஆறவைக்கவும். பின்னர் ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடித்து, சுத்தமான பாட்டிலில் அடைக்கவும்.


குறிப்பு: குருமா, குழம்பு, பொரியல், சப்பாத்தி மாவு, தோசை மாவு என எதில் வேண்டுமானாலும் இந்தப் பொடியைக் கலந்து பயன்படுத்தலாம். சாலட் செய்யும்போது, உப்பு, மிளகுத்தூளுடன், இந்த பவுடர் சேர்த்தும் சாப்பிடலாம். சாதத்தில் இந்தப் பொடியைச் சேர்த்து, பிசைந்து சாப்பிட்டால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது!


சாரைப்பருப்பு அல்வா


தேவையானவை:


சாரைப்பருப்பு - 1


கப், தேங்காய்ப்பால்


2 கப், வெல்லம் 1 1/2 கப்,


நெய் - 1/4 கப்.


செய்முறை: சாரைப்பருப்பை ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு, விழுதாக்கவும். இந்த விழுதை, அடிகனமான கடாயில் போட்டு, வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து, அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும். இதனுடன் நெய் சேர்த்து, கலவை சுருண்டு வந்ததும், அடுப்பை அணைக்கவும். சாரைப்பருப்பு அல்வா ரெடி


குறிப்பு: தேங்காய்ப்பாலில் இயற்கையாகவே மணமிருப்பதால், வேறு வாசனைப் பொருள்கள் தேவையில்லை. புரதம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த அல்வா இது. உடல் வெப்பத்தை குறைக்க உதவும். சருமத்தில் அரிப்பு, வியர்க்குரு வராமல் தடுப்பதோடு, சருமத்தைப் பளபளப்பாக வைக்கவும் உதவும்!


வெள்ளரி விதை சப்பாத்தி

வெள்ளரி விதை -1/4 கப், கோதுமை மாவு 1கப், இஞ்சி -சிறிய துண்டு, பச்சைமிளகாய் - 3, புதினா - 1 கட்டு, உப்பு, நெய் - தேவைக்கு.


செய்முறை; கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப்


பிசைந்து, மூடிவைக்கவும். மிக்ஸியில் பச்சைமிளகாய், புதினா, உப்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும். வெள்ளரி விதையை மிக்ஸியில் தனியாகப் போட்டு, கரகரப்பாகப் பொடிக்கவும். பிசைந்த கோதுமை மாவுடன், பச்சைமிளகாய் விழுது, பொடித்த வெள்ளரி விதை சேர்த்து, பிசைந்து, சமமான உருண்டைகளாக்கவும். பின்னர் சப்பாத்திகளாகத் திரட்டி, சூடனா தவாவில் போட்டு, நெய் ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு, வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு

நெய்க்குப் பதிலாக எண்ணெய் உபயோகிக்கலாம்.


வெள்ளரி விதை பாயசம்

தேவையானவை:

வெள்ளரி விதை,

பேரீச்சம்பழம் 1/2 கப், 

பால் தலா 1 லிட்டர்,

ஜாதிக்காய்த்தூள் - 2 சிட்டிகை.


செய்முறை: வெள்ளரி விதையை, 1 கப் பாலில் ஊறவைக்கவும்.


இத்துடன், விதை நீக்கிய பேரீச்சம்பழம், 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதுடன் மீதமுள்ள பால், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து, கொதிக்கவிடவும். தளதளவென கொதிக்கும்போது, அடுப்பை அணைத்து, இறக்கவும். பின்னர் பாயசத்தை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து எடுத்து, ஜில்லென பரிமாறவும்.


குறிப்பு: வெயில் காலத்தில் உற்ற நண்பன் வெள்ளரி விதை, சிறுநீர்ப்பாதையில் வரும் தொற்று, பித்தப்பையில் வரும் கோளாறுகளை நீக்கவல்லது. நார்ச்சத்து, வைட்டமின் 'ஈ', ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளிட்ட சத்துகள் இந்த விதையில் நிறைந்துள்ளன!

கருத்துகள்

www.kalaireal360.xyz

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...