இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...
இனிப்புக் கவுனியரிசி
தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்).
செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி,
3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும்.
ம
குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம்.
சீப்புச் சீடை
தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி,
விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெதுவெதுப்பாக இருக்கும்போது, அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவில் ஊற்றிப் பிசையவும். சீப்புச் சீடை கட்டையில் உருண்டையாக உருட்டிப்போட்டு, மாவை பிளாஸ்டிக் ஷீட்டில் பிழியவும். பின்னர், 3 இன்ச் துண்டுகளாக வெட்டி, 2 நுனிகளையும் விரலில் சுற்றி ஒட்டவும். மீதமுள்ள மாவையும் இதேபோல் செய்து, எண்ணெய்யை நன்றாகக் காயவைத்துபொரித்தெடுக்கவும்
மனகோலம்
தேவையானவை: பாசிப்பருப்பு மாவு, வெல்லம் - தலா 2 கப், தேங்காய் - 5 இன்ச் துண்டு, பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், டால்டா / எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, அரைத்து,
சலிக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து, பிசையவும். எண்ணெய் அல்லது டால்டாவை காயவைத்து, மனகோலக் கட்டையில் போட்டு பிழிந்து, 2 இன்ச் துண்டுகளாக உதிர்த்துவைக்கவும். தேங்காயைப் பல் பல்லாக நறுக்கி, நெய்யில் வதக்கவும். பொட்டுக்கடலையையும் நெய்யில் வறுத்துக் கொட்டவும். மனகோலம், தேங்காய், பொட்டுக்கடலை மூன்றையும் ஒரு சில்வர் / பித்தளை பேசினில் போடவும். வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, முற்றிய பாகு தயாரித்து, இந்தக் கலவையில் ஊற்றிக் கலந்துவிடவும். பொடித்த சர்க்கரைத் தூவி, ஆறியதும் பரிமாறவும்
கும்மாயம்
தேவையானவை: கும்மாய மாவு
200 கிராம், கருப்பட்டி 100 கிராம், -4 கப். 50 கிராம், தண்ணீர்
மற்றும் வெல்லம் - 1 1/2 கப், நெய்
நல்லெண்ணெய்
செய்முறை: பானில், தலா 50 கிராம் நெய்,
நல்லெண்ணெய் ஊற்றி, கும்மாய மாவைச் சேர்த்து,
வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம், கருப்பட்டியை உடைத்துப் போட்டு, அடுப்பில் வைக்கவும். கரைந்ததும், வடிகட்டி, மாவில் சேர்த்து, கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின்னர், அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடிபோல வரும்வரை கிளறி, மீதமுள்ள நெய்யை ஊற்றி, இறக்கவும்.
குறிப்பு: பச்சரிசி, பாசிப்பருப்பு, உளுந்து ஆகியவற்றை 1 கப் எடுத்து, வெறும் வாணலியில் வெதுப்பி, பொடித்து, சலித்தால், 'கும்மாய மாவு' தயார்.
வரமிளகாய்த் துவையல்
தேவையானவை: வரமிளகாய், சின்ன வெங்காயம் - தலா
10, பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 1 பல், தக்காளி - 2, பெருங்காயம் - 1 துண்டு, புளி - 2 சுளைகள், உளுந்து, எண்ணெய் - தலா 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஓர் இணுக்கு, உப்பு - 1/2 டீஸ்பூன்.
செய்முறை: பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம்,
பூண்டு ஆகியவற்றைத் தோலுரித்து, நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். மிக்ஸியில் வரமிளகாய், நறுக்கிய வெங்காயம் - பூண்டு கலவை, தக்காளி, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து, தண்ணீர் விடாமல் அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய்யைக் காயவைத்து, கடுகு, உ ளுந்து, கறிவேப்பிலைப் போட்டு தாளித்துக் கொட்டி, நன்றாகக் கலந்து, பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக