ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு அரை ஸ்பூன் சீரகம் வெங்காயம் 4 தக்காளி 4 ( சிறிதாக நறுக்கவும் )சேர்த்து வதக்கவும். பின்பு மிக்ஸியில் நைசாக அறைக்கவும். மசாலா ரெடி. பிறகு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணை 100 கிராம் போட்டு அதில் கரமசால் பவுடர் அரை ஸ்பூன். மஞ்சத்துள் அரை ஸ்யூன். மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் தேவையானளவு உப்பு சேர்த்து. பன்னீர் 100 கிராம் அளவு சிறிய துண்டுகளாக கட் செய்யவும்.(டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல ஐஸ் க்யூப் மாதிரி பன்னீர் வந்து கியூப் இருக்கும் அதையும் யூஸ் பண்ணலாம்)மசாலாவுடன் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும் .இப்ப பன்னீர் பட்டர் மசாலா ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக