மஸ்ரூம் 250 கிராம் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். (ஒரு அகலமான பாத்திரத்தில் 3.தண்ணீர் விட்டு அதில் 1ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு மஸ்ரூம் ஐ அலசிவிட்டு கொதிக்கும் வெந்நீரில் போட்டு10 நிமிடம் மூடி வைக்கவும்.பிறகு அதிலுள்ள கருப்பாக இருக்கும் பகுதிகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து தட்டில் வைத்துக் கொள்ளவும்)அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள். அரை டீஸ்பூன் மிளகுத்தூள்.கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும். பட்டை .கிராம்பு. ஏலக்காய் பொடி செய்து.அதில் தூவவும் வாசனை நன்கு வரும் போது வெங்காயம் 4 சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி 2 பொடியாக நறுக்கி நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன். மல்லித் தூள் அரை டீஸ்பூன். பிறகு நாம் கலந்து வைத்திருக்கும் மஸ்ரூம் இதனுடன் சேர்த்து. சிறிதளவு உப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை ஆப் நிறுத்தவும்.பின்புஒரு பாத்திரத்தில் மாற்றவும். அதன்மேல் மல்லித்தழை தூவவும். அருமையான மஸ்ரூம் மசாலா ரெடி.
கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும். தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...
கருத்துகள்
கருத்துரையிடுக